January 18, 2025, 5:46 AM
24.9 C
Chennai

சிவகாசி- ஐடி., அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி: திமுக.,வைச் சேர்ந்த இருவர் உள்பட 4 பேர் கைது!

#image_title

சிவகாசி அருகே பட்டாசு ஏஜென்டிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.10 லட்சம் மோசடி செய்த 4பேரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டி ராமச்சந்திரா புரத்தைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (வயது45) பட்டாசு ஏஜென்ட்டாக உள்ளார். இவரிடம் தாயில்பட்டி கோட்டையூரைச் சேர்ந்த கருப்பசாமி (55) சாத்தூர் அருகே இருக்கன்குடியைச் சேர்ந்த ரமேஷ் ( 38 ) சாத்தூர் அருகே வேப்பிலைபட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் ( 40 )கார் டிரைவர் சாத்தூர் அருகே இராமலிங்கபுரத்தைச் சேர்ந்த மகேஷ்குமார் (47) ஆகியோர் கடந்த 6 ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.10 லட்சம் வாங்கியுள்ளனர் .

கடந்த மூன்று நாட்களாக கூடுதலாக 10 லட்சம் கேட்டு சௌந்தரராஜனை மிரட்டி வந்துள்ளனர்.

இது குறித்து சிவகாசி டிஎஸ்பி அலுவலகத்தில் சௌந்தரராஜன் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கருப்பசாமி தாயில்பட்டி கோட்டையூர் கிளை திமுக., பிரதிநிதியாகவும், ரமேஷ் சாத்தூர் திமுக., இளைஞரணி நிர்வாகியாகவும் உள்ளனர்.

ALSO READ:  பொங்கல் கொண்டாட்டம்; வருமான வரித் துறை அலுவலகத்தில் வடிவேலு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

செகந்திராபாத் – கொல்லம் ரயில் மேலும் ஒரு சேவை நீட்டிப்பு!

முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. விரைவில் உங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும். தென்காசி, விருதுநகர் மாவட்ட பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஹிந்துத்துவமே ஒரே தீர்வு!

ரஷ்யாவில் 15 தனி அடையாளங்கள், 15 தனி நாடுகளாக உருவாகின. ஆனால் இங்கோ வாய்ப்பு கிடைத்த போதிலும் 565 சமஸ்தானங்களும் ஒரே நாடாக ஆகின.

ஆன்மீகம் – வாழ்வின் நோக்கம்

வாழ்க்கையின் நோக்கம் என்ன ? இது மகத்தான கேள்வி. நீங்கள் விழிப்புணர்வுடனோ அல்லது தெரியாமலோ இதை கேட்டிருக்கலாம். நம் அனுபவத்தின் அடித்தளமாக இந்த கேள்வி உள்ளது.

பஞ்சாங்கம் ஜன.17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை