இரை என்று நினைத்து பிளாஸ்டிக் பாட்டில் ஒன்றை அகல விரித்த வாயில் கவ்வி, உள்ளே தள்ளி முழுங்கிய பாம்பு, படாத பாடு பட்டது. ஊர்ந்து போக முடியாமல் கஷ்டப்பட்டு, ஜீரணிக்கவும் முடியாமல் சிரமப்பட்டு, பின்னர் வேறு வழி தெரியாமல், முழுங்கிய பாட்டிலை சிரமப்பட்டு வெளியே கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்பக்கத்துக்குக் கொண்டு வந்து துப்பித் தள்ளியது.
இது குறித்த வீடியோ ஒன்று சமூகத் தளத்தில் வைரலானது. இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும், மனிதர்கள் தங்கள் சொகுசான வாழ்க்கைக்காக பிளாஸ்டிக்கை பயன்படுத்துகின்றனர். அவை எந்த அளவுக்கு மற்ற உயிரினங்களுக்கும் இயற்கைக்கும் எதிராக மாறிவிடுகிறது என்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.