அதிமுகவின் கழகச் செய்தித் தொடர்பாளராக புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் சேர்ந்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “அதிமுகவின் கழகச் செய்தித் தொடர்பாளராக புகழேந்தி (கர்நாடக மாநிலம்) இன்று முதல் நியமிக்கப்படுகிறார் என்றும் கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறோம் என்றும் அறிவித்துள்ளனர்.
புகழேந்தி அமமுகவிலிருந்து விலகி அதிமுகவில் அண்மையில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.