லாக் டவுனில் ஊருக்கு போகணும்னு… பால் கேனுக்குள் பயணித்த மாணவர்கள்!

Published:

students cautght travelling inside milk tanker - 2026

கரோனா வைரஸ் லாக்டௌனால் மக்கள் பயணிப்பது ஸ்தம்பித்து உள்ளது. சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் படும் கஷ்டங்கள் அத்தனை இத்தனை என்று கூற இயலாது. எவ்வளவோ சிரமப்பட்டு மாநில எல்லை வரை சென்றாலும் கூட அங்கு குவாரண்டினில் சேர்த்து விடுகிறார்கள்.

அதனால் ஆந்திரப் பிரதேச மாணவர்களுக்கு ஒரு ஐடியா வந்தது. அதற்காக பால் வேன் டிரைவரின் உதவியை நாடினார்கள். பால் டாங்கில் அமர்ந்து கொண்டு எல்லையைத் தாண்டி விட வேண்டும் என்று முயற்சித்தவர்களுக்கு போலீசார்கள் எதிர்ப்பட்டார்கள்.

லாக்டௌன் சமயத்தில் தெலங்காணாவில் இருந்து ஆந்திரப் பிரதேஷ் செல்வதற்கு முயற்சித்த மூன்று மாணவர்கள் போலீசாரிடம் சிக்கினார்கள்.
ஹைதராபாத்திலிருந்து பிரகாசம் மாவட்டம் சிங்கராயகொண்டக்குச் சென்ற பால் வேனை மியாலரிகுடாவில் நிறுத்தி மாணவர்கள் அதன் காலி டாங்கில் பதுங்கி அமர்ந்தார்கள்.

காரெஞ்செடு என்ற இடத்தை நோக்கி செல்லும்போது நடுவில் பொந்துகுல என்ற இடத்தில் செக்போஸ்ட் அருகில் வாகனங்களை சோதனையிட்ட ஸ்பெஷல் பார்ட்டி போலீசார் அவர்களை கைது செய்தார்கள். பால் வேன் டிரைவருக்கு பணம் கொடுத்து மாணவர்கள் பிரயாணம் செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img