மது உடலுக்கு கேடு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அது உயிரையே குடிக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நடந்துள்ளது.
பிரிட்டனில் பிரைட்டன் என்னும் மாகாணத்தை சேர்ந்த 27 வயதான அலைஸ் புர்ட்டன் ப்ராஃபோர்டு என்ற பெண் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அதிர்ச்சிகரமான தகவல் தெரியவந்தது.
அவர் இறப்பதற்கு முன் வெறும் வயிற்றில் மது அருந்தியுள்ளார் என்பது தான் அது. அதன் காரணமாக அவர் ஆல்கஹால் கெட்டோ அசிடோசிஸால் மிகவும் அவதிப்பட்டுள்ளார். நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அலைஸ் யாருமே எதிர்பார்க்காத நிலையில், உயிரிழந்துள்ளார்.
அந்த பெண் தினமும் சைக்ளிங், ரன்னிங் பயிற்சி மேற்கொள்பவர். அப்படிஇருந்த அவருக்கு இப்படி மோசமானதொரு முடிவை மது தேடித் தந்திருக்கிறது.