மதுரை வாடிப்பட்டியில் பொன்மலை பெருமாள் கோவிலில் சசிகலா பிறந்த நாளை முன்னிட்டு பேரூர் செயலாளர் மதன் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை அன்னதானம் நடைபெற்றது
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் பழமையும் பெருமையும் வாய்ந்த பொன் மலை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் பேரூர் அம்மா மக்கள் முன்னேற்றகழகம் சார்பாக சசிகலா பிறந்தநாள் விழாவை யொட்டி சிறப்பு பூஜை, அன்னதானம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பேரூர்செயலாளர் மதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட துணைச் செயலாளர் தேவி, எம்.ஜி.ஆர்அணி மாவட்டசெயலாளர் சந்திரசேகரன்,
டிராக்டர்முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூர் துணைசெயலாளர் சாரதிசங்கர் வரவேற்றார். இதில் மீனவரணி மாவட்ட செயலாளர் காடுபட்டிபாலு,
நிர்வாகிகள் மருதுபார்த்தீபன், கார்த்தி,செல்வம், மாணவரணி சாய்குமார் உள்பட பலர்கலந்து கொண்டனர். முடிவில் தொழிற்சங்கபேரவை ரவிசங்கரன்
நன்றி கூறினார்.
- செய்தி : ரவிச்சந்திரன் மதுரை