விசுவ ஹிந்து பரிஷத் திருநெல்வேலி தச்சல்லூர் மண்டல் சார்பாக கோமாதா பூஜை இன்று நடைபெற்றது.
அக். 09 இன்று மாலை 5 மணிக்கு , தச்சநல்லூர் பைபாஸ் உலகம்மன் கோவில் எதிரே உள்ள அருந்தியர் காலனியில் வைத்து இந்த கோமாதா பூஜை நடைபெற்றது.
பசுக்கள் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களுக்கு அரிய பல தகவல்கள் எடுத்துரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி, தச்சநல்லூர் மண்டல் அமைப்பாளர் இசக்கி, செயலாளர் குருசாமி, செந்தில், ரமேஷ், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.