அரசமைப்பு சட்டம் புதைத்த மனுநூலுக்கு மறுவாழ்வா? என்ற ஒரு கட்டுரையை ஜூனியர் விகடனில் கட்டுரையாக எழுதியுள்ளார் ஒய்வு பெற்ற நீதிபதி ‘கம்மி’ சித்தாந்தவாதி சந்துரு அவர்கள்.
புதைத்து விட்டதாக சொல்லப்படுவதை திருமாவளவன் ஏன் தோண்டி எடுக்கிறார்? பின்னணியில் யார்? ஏன் இந்த திடீர் தோண்டுதல் என்பதையெல்லாம் கேட்காமல், புதைத்துவிட்டதாக சொல்லப்படுகிற நூலுக்கு மீண்டும் உயிர்கொடுப்பதன் நோக்கம் என்ன?
மத கலவரத்திற்கு வித்திடுவதற்கு கம்மிகள் தான் தூண்டுகிறார்களோ என்கிற சந்தேகத்தை எழுப்புகிறார் கம்மி சந்துரு அவர்கள். பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் தன் ‘கம்மி’ சிந்தனையிலிருந்து ஒய்வு பெறாது சாதிய, மத வெறுப்புகளை பரப்ப முயற்சிப்பது ஏனோ?
அப்படி அரசமைப்பு சட்டம் மீது உறுதி கொண்டிருந்தால், திருமாவளவன் அவர்களிடம், தேவையில்லாததை, வழக்கத்தில் இல்லாததை பேசவேண்டாம் என்ற அறிவுரையல்லவா நல்கியிருக்க வேண்டும்?
கம்யூனிசமே உன் பெயர் கலகமா?
- நாராயணன் திருப்பதி.