தனது கணவர் அவரது அண்ணியின் ஆபாச புகைபடங்களை பார்த்து ரசித்து வந்ததால் மனைவி எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
38 வயதான அருள் கடலூர் மாவட்டத்தில் ஒதியடிகுப்பம் பகுதியில் காவல்துறையில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும் 30 வயதான ராஜேஸ்வரி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றதை அடுத்து இருவரும் சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள காவல்துறையினர் குடியிருப்பில் வசித்து வந்தனர். இதனிடையே, ராஜேஸ்வரி நேற்றிரவு யாரும் எதிர்பாராத வகையில் கயிற்றில் தொங்கியுள்ளார்.
இந்நிலையில், ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் சென்னை பட்டினப்பாக்கம் காவல்நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் “20-ஆம் தேதியன்று என்னுடைய சகோதரி என்னிடம் செல்போனில் பேசிய போது தனது கணவர் அருள் அவரது அண்ணி வெண்ணிலாவுடன் தவறான தொடர்பில் இருப்பதால் தன்னை மிகவும் கஷ்ட்டப்படுத்துவதாக கூறியுள்ளார்.
மேலும், அவரது அண்ணியின் ஆபாச புகைப்படங்களை செல்ஃபோனில் வைத்து ரசித்துக்கொண்டு என் சகோதரியை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் வேதனை கொடுத்தால் என்னுடைய சகோதரி இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறினார். மேலும் தன்னுடைய சகோதரியின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று குறிபிட்டுள்ளார்.