கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

well 1 - 2026

பெரம்பலூர் அருகே வெள்ளனூர் கிராமத்தில், கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர்கள் தேவன், மீனா தம்பதியினர். இவர்களுக்கு நவநிஷா (7), பவதாரணி (5), தேவசீலன் (1) ஆகிய 3 பிள்ளைகள்.

கிணறு வெட்டும் தொழில் செய்துவரும் தொழிலாளிகளான தேவன், மீனா தம்பதியினர் கடந்த சில தினங்களாக, புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமத்தில் தங்கிக்கொண்டு அவ்வூரை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் தங்களது பெண் குழந்தைகளான நவநிஷா, பவதாரிணி ஆகியோரை உறவினர் ஒருவர் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தம்பதியினர் வீட்டில் இருந்த போது அவர்களது ஒன்றரை வயது ஆண்குழந்தை தேவசீலன் தவழ்ந்து விளையாடியபடி சென்று அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

மாலையில் குழந்தையை காணாமல் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த தம்பதியினர், பின்னர் கிணற்றில் தங்களது குழந்தையின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

பின்னர் உயிர் இருக்கும் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து குழந்தையின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு குழந்தை இறந்தது உறுதி செய்யப் பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

Topics

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Entertainment News

Popular Categories