December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!

well 1 - 2025

பெரம்பலூர் அருகே வெள்ளனூர் கிராமத்தில், கிணற்றில் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் வசித்து வருபவர்கள் தேவன், மீனா தம்பதியினர். இவர்களுக்கு நவநிஷா (7), பவதாரணி (5), தேவசீலன் (1) ஆகிய 3 பிள்ளைகள்.

கிணறு வெட்டும் தொழில் செய்துவரும் தொழிலாளிகளான தேவன், மீனா தம்பதியினர் கடந்த சில தினங்களாக, புது நடுவலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளனூர் கிராமத்தில் தங்கிக்கொண்டு அவ்வூரை சேர்ந்த வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால் தங்களது பெண் குழந்தைகளான நவநிஷா, பவதாரிணி ஆகியோரை உறவினர் ஒருவர் வீட்டில் பாதுகாப்பாக விட்டுவிட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தம்பதியினர் வீட்டில் இருந்த போது அவர்களது ஒன்றரை வயது ஆண்குழந்தை தேவசீலன் தவழ்ந்து விளையாடியபடி சென்று அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்ததால் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.

மாலையில் குழந்தையை காணாமல் அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்த தம்பதியினர், பின்னர் கிணற்றில் தங்களது குழந்தையின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர்.

பின்னர் உயிர் இருக்கும் எப்படியாவது காப்பாற்றி விடலாம் என நினைத்து குழந்தையின் சடலத்தை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு குழந்தை இறந்தது உறுதி செய்யப் பட்டது. இச்சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories