December 6, 2025, 7:18 AM
23.8 C
Chennai

அதிகரிக்கும் கொரோனா: தலைமை செயலர் ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை!

corona-test
corona-test

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா பரவல் பல உயிர்களை காவு வாங்கியுள்ளது.கோடிக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாட்டுகளால் கொரோனா படிப்படியாக குறைந்த நிலையில் மீண்டும் இந்தியா முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டன. அந்த வகையில் தமிழகத்திலும் இயல்பு நிலை திரும்பியது. இந்த சூழலில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 300க்கு குறைவானவர்களே குறைவால் பாதிக்கப்பட்டு வந்தனர்

ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 836 பேர் தொற்றுக்கு ஆளாகி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 8 லட்சத்து 60 ஆயிரத்து 572 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் இதுவரை 12,551 கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். சென்னையை பொருத்தவரையில் அதிகபட்சமாக 317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் செங்கல்பட்டில் 81 பேருக்கும் கோவையில் 70 பேருக்கும் தொற்று இருப்பது உறுதியானது. இதனால் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் காணொலியில் அவசர ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 800க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று தலைமைச்செயலாளர் ஆலோசனை நடத்துகிறார்.

இதன் மூலம் மீண்டும் கொரோனாவை தடுப்பது எப்படி? பொதுமுடக்கம் அமல்படுத்தலாமா? அல்லது வார இறுதி நாட்களில் ஊரடங்கு கொண்டுவருவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories