திருமணமாகி 2 மாதங்களுக்கு பிறகு மனைவி ஒரு திருநங்கை என தெரிந்து கொண்ட கணவன் என்ற செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்திர பிரதேசம், கான்பூர் மாவட்டம், சாஸ்திரி நகரைச் சேர்ந்த ஒருவர், அதே மாவட்டத்தின் பான்கி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி திருமணம் செய்துள்ளார்.
வழக்கம் போல அது எல்லோரும் திருமணம் செய்யும் திருமணம் போல இருந்துள்ளது. திருமணமத்திற்கு பிறகு கணவன் மனைவியுடன் சேர்ந்து இருக்க பல முறை முயற்சி செய்துள்ளார்.
ஆனால் மனைவி தனக்கு உடல் நிலை சரியில்லை என ஒவ்வொரு முறை அவர் முயற்சி செய்யும் போதும் ஒவ்வொரு காரணம் சொல்லியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவரை அணுகி உடல் நிலை குறித்து பரிசோதனை செய்துள்ளனர். இதன் அடிப்படையில் தான், அந்த பெண் ஒரு திருநங்கை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் இதை கணவரிடம் கூறிய போது அவருக்கு தூக்கிவாரி போட்டது.
பின்னர் கணவர் தன் மனைவி மீது அவரது குடும்பத்தினர் மீதும் போலீசாரிடம் இவர்கள் தங்களை ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளனர்.
அதன் போலீசார் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது 420 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் மொத்தம் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.