தில்லி விளையாட்டு பல்கலை துணை வேந்தரான கர்ணம் மல்லீஸ்வரி!

Published:

karnam malleswari - 2026

டெல்லி ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி வைஸ் சான்சிலராக ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த பளு தூக்கும் விளையாட்டு வீராங்கனை கர்ணம் மல்லீஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டெல்லி உயர் கல்வித்துறை இயக்குனர் அஜ்மில்கான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லீஸ்வரி 2000மாவது ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றளித்தார். 1999ல் மத்திய அரசு பத்மஸ்ரீ விருது அளித்து மல்லீஸ்வரியை கௌரவித்தது.

பிரமுக வெயிட் லிஃப்டர் பத்மஸ்ரீ கர்ணம் மல்லேஸ்வரி (46) யின் நியமனம் குறித்து செவ்வாயன்று டெல்லி அரசாங்கம் உத்தரவு வெளியிட்டுள்ளது. இந்த ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்திற்கு கர்ணம் மல்லீஸ்வரி முதல் விசி என்று அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர். விரைவிலேயே இந்த நியமனம் தொடர்பாக நடைமுறைகள் வெளியிடப்படும் என்று தெரிவித்தனர்.

ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த கர்ணம் மல்லீஸ்வரி 2000 வது ஆண்டில் நடந்த சிட்னி ஒலிம்பிக்கில் பங்கு கொண்டு இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றளித்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் பாரதியப் பெண்ணாக பெருமை பெற்றார்.

ஒலிம்பிக் வெற்றிக்கு முன்பாகவே… 29 சர்வதேச பதக்கங்களோடு இரண்டு முறை வெயிட் லிஃப்டிங்கில் உலக சாம்பியனாக கர்ணம் மல்லீஸ்வரி நின்றுள்ளார். இதில் 11 தங்கப்பதக்கங்கள் உள்ளன. 1999ல் மத்திய அரசாங்கம் மிக உயர்ந்த விருதான பத்மஸ்ரீ அளித்து கர்ணம் மல்லீஸ்வரியை கௌரவித்தது. 1994ல் அர்ஜுனா அவார்டு பெற்ற மல்லீஸ்வரி 1995ல் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றார்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

ஸ்போர்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் விளையாட்டு வீரர்கள் தான் தேர்ந்தெடுக்கும் விளையாட்டில் பிஹெச்டி வரை படித்து பட்டம் பெறலாம் என்று டெல்லி டிப்யூடி சிஎம் மனீஷ் சிசோடியா தெரிவித்தார். அவர்கள் வேறு எந்த டிகிரியும் படிக்க வேண்டிய தேவை இருக்காது என்று கூறினார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் நாட்டுக்கு குறைந்தபட்சம் 50 வரை தங்கப் பதக்கங்கள் பெறும்படியாக விளையாட்டு வீரர்களை தயார் செய்வதே இந்த யூனிவர்சிடி ஏற்பாட்டின் பின்னால் உள்ள முக்கிய உத்தேசம் என்று அவர் விவரித்தார். டெல்லி ஸ்போர்ட்ஸ் யுனிவர்சிட்டி விளையாட்டுத்துறையில் தேசம் கர்வப்படும் விதமாக செயல்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்று கூறினார்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img