உளுந்தூர்பேட்டை அருகே ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தொடர்பாக இளைஞர் போச்சோவில் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்த இருந்தை கிராமத்தை சேர்ந்தவர் கசீர்ராஜ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 28 வயது பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. அந்த பெண் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், காதலர்கள் சென்னையிலிருந்து அவர்களது சொந்த ஊருக்கு பேருந்தில் வந்தனர். அப்போது கசீர்ராஜ் அந்தப் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதில் அந்தப்பெண் கர்ப்பிணியாக இருந்தபோது பழச்சாற்றில் மருந்து கலந்து கொடுத்து கர்ப்பத்தை கலைத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அந்த பெண் கசீர்ராஜிடம் கேட்டபோது தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் இளம்பெண் புகார் செய்தார். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் கசீர்ராஜை போக்சோவில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.