‘சர்ச்’சையில் சிக்கிய கரினா!

karina kapoor - 2026

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் தனது புத்தகத்திற்கு வைத்துள்ள பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு தைரமூர் அலிகான் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக கர்ப்பமுற்றுள்ளதாக கரீனா அறிவித்தார்.

அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த புத்தகத்தில் தனது இரு கர்ப்பங்களின் மூலமாகவும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அனுபவித்தவற்றின் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றும் கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஒரு புத்தகத்தில் எழுதி வெளியிட்டுள்ளார் கரீனா.

இந்த புத்தகத்திற்கு PREGNANCY BIBLE என பெயரிடப்பட்டது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தை விற்பனை செய்ய கரீனா, தொடர்ச்சியான பதிவுகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறார்.

karina - 2026

கரீனா தனது புத்தகத்தை தனது மூன்றாவது குழந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே என்பவர், இந்தப் பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த பூகாரில், புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்தவர்களின் புனித நூலாக உள்ள நிலையில், கரீனா கபூர் தனது புத்தகத்திற்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்நாத் தொம்ப்ரே கூறுகையில், “நாங்கள் புகாரைப் பெற்றுள்ளோம், ஆனால் சம்பவம் இங்கு (பீட் நகரில்) நடக்காததால் இங்கு வழக்கு பதிவு செய்ய முடியாது. மும்பையில் புகார் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories