December 6, 2025, 2:37 PM
29 C
Chennai

‘சர்ச்’சையில் சிக்கிய கரினா!

karina kapoor - 2025

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் தனது புத்தகத்திற்கு வைத்துள்ள பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூர் பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கடந்த 2012-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு தைரமூர் அலிகான் என்ற மகன் உள்ள நிலையில், கடந்த ஆண்டு மீண்டும் இரண்டாம் முறையாக கர்ப்பமுற்றுள்ளதாக கரீனா அறிவித்தார்.

அதனையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.

அந்த புத்தகத்தில் தனது இரு கர்ப்பங்களின் மூலமாகவும் உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் அனுபவித்தவற்றின் தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மற்றும் கர்ப்பகாலத்தில் ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்த ஒரு புத்தகத்தில் எழுதி வெளியிட்டுள்ளார் கரீனா.

இந்த புத்தகத்திற்கு PREGNANCY BIBLE என பெயரிடப்பட்டது தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஜூலை மாதம் 9-ம் தேதி வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தை விற்பனை செய்ய கரீனா, தொடர்ச்சியான பதிவுகளையும் விளம்பரங்களையும் வெளியிட்டு வருகிறார்.

karina - 2025

கரீனா தனது புத்தகத்தை தனது மூன்றாவது குழந்தை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மராட்டிய மாநிலம் பீட் நகரைச் சேர்ந்த அல்பா ஒமேகா கிறிஸ்டியன் மகாசங்கத் தலைவர் ஆசிஷ் ஷிண்டே என்பவர், இந்தப் பெயர் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக புத்தகத்திற்கு பெயர் வைத்திருப்பதாக பீட் நகரில் உள்ள சிவாஜி நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த பூகாரில், புத்தகத்தின் பெயரில் இடம் பெற்றுள்ள வார்த்தையான பைபிள், கிறிஸ்தவர்களின் புனித நூலாக உள்ள நிலையில், கரீனா கபூர் தனது புத்தகத்திற்கு பைபிள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி கிறிஸ்தவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்திவிட்டார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சிவாஜி நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சாய்நாத் தொம்ப்ரே கூறுகையில், “நாங்கள் புகாரைப் பெற்றுள்ளோம், ஆனால் சம்பவம் இங்கு (பீட் நகரில்) நடக்காததால் இங்கு வழக்கு பதிவு செய்ய முடியாது. மும்பையில் புகார் அளிக்குமாறு அவருக்கு அறிவுறுத்தியுள்ளேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories