ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

Published:

devadanam temple security killed case - 2026
1001102800 - 2026

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர் கொலை செய்ய பட்ட கொலை வழக்கில் கைதான குற்றவாளிகள் இருவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு
வருகிறது.

1001102799 - 2026

இராஜபாளையம் உட்கோட்டம், சேத்தூர் காவல் நிலைய சரகம், கடந்த 10.11.2025ம் தேதி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தேவதானம் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோவிலில்
தற்காலிக பாதுகாப்பு காவல் பணியாளர்களாக பணியில் இருந்த பேச்சிமுத்து (54) மற்றும் சங்கரபாண்டியன் (69) ஆகியோர்களை கொலை செய்து மேற்படி கோவில் உண்டியலில் இருந்த பணம் மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளை அடித்தனர்.

இது சம்பந்தமாக கொடுத்த புகாரின் அடிப்படையில் சேத்தூர் காவல் நிலையத்தில் ஆதாய கொலை வழக்கு பதிவு செய்து 24 மணி நேரத்தில் எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

இந்நிலையில் மேற்படி எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40)
ஆகியோர் இது போன்ற குற்றச் சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடாமல் இருப்பதை
தடுப்பதற்காகவும், இவர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் பொருட்டும் இவர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், இன்று 29.11.2025-ம் தேதி விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.சுகபுத்ரா
எதிரிகளான நாகராஜ் (26) மற்றும் முனியசாமி (40) ஆகியோர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் எதிரிகள் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டனர். பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்தும் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் வகையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி.கண்ணன் தெரிவித்துள்ளார்..

ALSO READ:  உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img