நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

Published:

thiruparankundram deepam 1 - 2026

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் பக்தர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். முன்னதாக மலைமீது ஏற்றப்படும் தீபத்தை தங்கள் வாழ்நாளில் முதல்முறையாக காண வேண்டும் என்பதற்காக காத்திருந்த பக்தர்கள் தங்கள் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்கள். இதனால் கோயில் முன் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோது முதல் உலகப்போர் நேரத்தில் பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்ட தீபத்தூணில் தீபம் ஏற்றும் நிகழ்வானது 105 வருடங்களுக்குப் பிறகு தற்போது ஏற்றப்படும் என நீதிமன்றம் அனுமதியும் உத்தரவும் அளித்த பிறகும் கூட, வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 

இதை அடுத்து நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரர் 10 பேருடன் சென்று திருப்பரங்குன்றம் மலையில் உடன் சென்று தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் எனவும், சிஐஎஸ்எப் போலீசார் பாதுகாப்புக்குச் செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம்  உத்தரவிட்டது.

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

மனுதாரருடன் 10 பேர் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இதை அடுத்து நாளை 12 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய சிஆர்பிஎஃப்க்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related articles

Recent articles

spot_img