108 போர்வைகள் சாற்றப்பட, ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசி!

Published:

kaisika ekadasi in andal temple

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் திருக்கோயிலில் .கைசிக ஏகாதசியை முன்னிட்டு இன்றைய தினம் 02.12.25 செவ்வாய் க்கிழமை கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசியை முனன்னிட்டு ஶ்ரீ ஆண்டாள் ஶ்ரீ ரெங்கமன்னார் கருடாழ்வார் மற்றும் ஶ்ரீ பெரிய பெருமாள் வடபத்திர சாயி ஶ்ரீதேவி,பூமாதேவி தாயார் மற்றும் ஆழ்வார்கள் வடபத்திர சாயி பெருமாள் சன்னதியில் உள்ள பகல் பத்து மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு திவ்ய காட்சி தந்தருளினர்.

ஸ்ரீ வில்லிபுத்தூர் 108 வைணவ திருத்தலங்களில் சிறப்பு பெற்றதாகும். இங்கு ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் சுக்லபட்ச ஏகாதசி அன்று நம்பாடுவான் என்ற பக்தனுக்கு பெருமாள் அருள் செய்ததை முன்னிட்டும், குளிர் காலம் வருவதால் அதனை பக்தர்களுக்கு அறிவிக்கும் வண்ணமும், இங்கு கோவில் கொண்டு அருள் பாலிக்கும் சுவாமிகளுக்கு 108 போர்வைகள் சாற்றப்படும் வைபவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

அதுபோல் இந்த ஆண்டு இவ்வைபவம் இன்று 15.12.2021 அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. இந்த வைபவத்தின் போது இன்று ஒரு நாள் மட்டுமே கருடாழ்வார் சன்னதியிலிருந்து புறப்பட்டு பகல் பத்து மண்டபம் எழுந்தருளுவார். அங்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள், ஸ்ரீ தேவி, பூமிதேவி, ஆழ்வார்கள், ஆச்சாரியர்களுக்கு 108 போர்வை சாற்றும் வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இதனை முன்னிட்டு திங்கட்கிழமை இரவு முதல் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் பெரிய பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று இன்று அதிகாலையில் 108போர்வை அணிவித்து பூஜைகள் நடத்தி புராணம் வாசிக்கப்பட்டது. அதிகாலை வேளையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Sakthi Paramasivan.k
Sakthi Paramasivan.k
Media News Reporter, Rajapalayam

Related articles

Recent articles

spot_img