February 20, 2026, 8:06 PM
27.3 C
Chennai

மதம் மாறிவிட்டால் பட்டியல் சமூக சலுகைகள் கிடையாது; நீதிமன்றம்!

allahabad high court judges agarwal - 2026
Prayagraj High court

கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய நபர்கள், பட்டியல் சாதியினருக்கு (SC) வழங்கப்படும் சலுகைகளைத் தொடர்ந்து பெறாததை உறுதி செய்யுமாறு அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரப் பிரதேசத்தின் முழு நிர்வாக இயந்திரத்துக்கும் ஒரு விரிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

மதமாற்றத்திற்குப் பிறகு SC அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது “அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான மோசடி” என்பதைக் கவனித்த நீதிமன்றம், அத்தகைய நிகழ்வுகளைக் கண்டறிந்து தடுக்க சட்டத்தின்படி செயல்பட மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நான்கு மாத காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது.

இந்து தெய்வங்களை கேலி செய்ததாகவும், பகைமையை ஊக்குவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்ட ஜிதேந்திர சஹானி என்பவர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி பிரவீன் குமார் கிரி தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவுகளைப் பிறப்பித்தது.

ஐபிசி பிரிவுகள் 153-A மற்றும் 295-A இன் கீழ் சஹானிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகை மற்றும் விசாரணை உத்தரவை ரத்து செய்வது தொடர்பாக சஹானி தாக்கல் செய்த மனுவை பெஞ்ச் விசாரித்தது.

Prayagraj High court
Prayagraj High court

சஹானி தனது சொந்த நிலத்தில் “இயேசு கிறிஸ்துவின் வார்த்தைகள்” என்பதை பிரசாரம் செய்ய அனுமதி கோரியதாகவும், அவர் மீது பொய்யாக குற்றம் சாட்டப்பட்டதாகவும் மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால், அரசு தரப்பில் அவரது மதம் குறித்த கடுமையான முரண்பாட்டைக் குறிப்பிட்டனர். சஹானி தனது விண்ணப்பம் தொடர்பாக தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் தனது மதத்தை ‘இந்து’ என்று குறிப்பிட்டிருந்தாலும், காவல்துறை விசாரணையில் இதற்கு நேர்மாறான காட்சி வெளிப்பட்டதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

பிரிவு 161 குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சாட்சியின் அறிக்கையை, கூடுதல் அரசு வழக்கறிஞர்,  நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார். அவர், முதலில் கேவட் சமூகத்தைச் சேர்ந்த சஹானி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, ‘பத்ரி’ (பூசாரி) ஆக செயல்பட்டு வந்தார் என்று சாட்சியமளித்தார்.

ஏழை மக்களை கவர்ந்திழுக்கும் வகையில், அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களை கிறிஸ்தவர்களாக மாற்ற விரும்புகிறார் என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இதை தீவிரமாகக் கவனித்த உயர் நீதிமன்றம், கிராமவாசிகளைத் திரட்டி,  மதமாற்றத்தை ஊக்குவிப்பதற்காக இந்து தெய்வங்களைப் பற்றி இழிவான, அவதூறான மற்றும் அபத்தமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக சஹானி மீது குற்றம் சாட்டப்பட்ட சாட்சிகளின் அறிக்கையை கவனத்தில் கொண்டார்.

மேலும் சஹானி இந்து நம்பிக்கைகளை கேலி செய்த வண்ணம், கிராமவாசிகளிடம் இவ்வாறு கூறியுள்ளார்:  “நீங்கள் பல நூற்றாண்டுகளாக இந்து மதத்தைப் பின்பற்றி வருகிறீர்கள்… அதற்கு ஆயிரக்கணக்கான கடவுள்கள் மற்றும் தெய்வங்கள் உள்ளன; ஒருவருக்கு எட்டு கைகள் உள்ளன, ஒருவருக்கு நான்கு கைகள் உள்ளன, ஒருவருக்கு முகத்தில் ஒரு தும்பிக்கை உள்ளது… ஒருவர் எலி சவாரி செய்கிறார், ஒருவர் மயில் சவாரி செய்கிறார்… ஒருவர் பாங் குடிக்கிறார், ஒருவர் கஞ்சா புகைக்கிறார்”.

சாதி படிநிலைகள் காரணமாக இந்து நம்பிக்கைக்கு மரியாதை வழங்கப்படவில்லை என்றும், கிறிஸ்தவத்தைத் தழுவினால் ‘மிஷனரி’யிடமிருந்து வேலைகள், வணிக வளர்ச்சி மற்றும் நிதி நன்மைகளுக்கு அது வழிவகுக்கும் என்றும் கூறி, சஹானி இந்து நம்பிக்கைகளைக் கேலி செய்ததாகவும் அந்த சாட்சி குற்றம் சாட்டினார்.

அரசியலமைப்பு (பட்டியல் சாதி) உத்தரவு, 1950 இன் படி மதம் மாறியவர்களின் சட்டப்பூர்வ நிலையைக் கணக்கில் எடுத்துக்கொண்ட நீதிபதி கிரி, தனது உத்தரவில், இந்து மதம், சீக்கியம் அல்லது பௌத்தத்திலிருந்து வேறுபட்ட மதத்தைச் சேர்ந்த எவரையும், ஒரு பட்டியல் சாதியைச் சேர்ந்தவராகக் கருத முடியாது என்று குறிப்பிட்டார்.

சி. செல்வராணி எதிர் மாவட்ட ஆட்சியர் 2024  வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பை நீதிமன்றம் பெரிதும் நம்பியிருந்தது. அதில், ‘கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்போது, ஒரு தனிநபர், தனது அசல் சாதியைச் சேர்ந்தவர் ஆகமாட்டார்’ என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கில், சலுகைகளைப் பெறுவதற்காக மட்டுமே மத மாற்றம் செய்வது, அரசியலமைப்பின் மீதான மோசடியாகவும், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளின் நெறிமுறைகளுக்கு முரணாகவும் பார்க்கப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியது. மேலும், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் 2025 ஆம் ஆண்டு அக்கலா ராமி ரெட்டி எதிர் ஆந்திர மாநிலம் வழக்கில் தீர்ப்பளித்ததையும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டது. 

அதில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறி, அதையே தீவிரமாகப் பின்பற்றி, கடைப்பிடிக்கும் ஒரு நபர், பட்டியல் சாதி சமூகத்தில் உறுப்பினராகத் தொடர முடியாது என்றும், அதன் விளைவாக பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் விதிகளைப் பயன்படுத்துவதில் இருந்து தடைசெய்யப்படுகிறார் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. 

எனவே, சட்டம் அதன் ‘உண்மையான அர்த்தத்தில்’ செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய, நீதிபதி கிரி, உயர் அதிகார மட்டத்துக்கு விரிவான உத்தரவுகளை பிறப்பித்தார். அட்டவணை சாதியினர் மற்றும் சட்ட விதிகள் குறித்து ஆராயுமாறு அமைச்சரவை செயலாளர் (இந்திய அரசு) மற்றும் தலைமைச் செயலாளர் (உ.பி. அரசு) ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும், சிறுபான்மையினர் நலத்துறையின் முதன்மைச் செயலாளர், சிறுபான்மை அந்தஸ்து மற்றும் அட்டவணை சாதி அந்தஸ்து ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

முக்கியமாக, உத்தரபிரதேசத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் நான்கு மாதங்களுக்குள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றத்தால் குறிப்பிடப்பட்டபடி, “அரசியலமைப்பு மோசடி” அவர்களின் பகுதிகளில் நடக்காமல் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களின் நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளரிடம் தெரிவிக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில், விண்ணப்பதாரரை (சஹானி) பொறுத்தவரை, அவரது தவறான பிரமாணப் பத்திரத்தை நீதிமன்றம் தீவிரமாகக் கவனித்து, மூன்று மாதங்களுக்குள் அவரது மதம் குறித்து விசாரிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார்.

கிறிஸ்தவ பாதிரியாராக இருந்துகொண்டு, நீதிமன்ற ஆவணங்களில் இந்து என்று கூறி சஹானி மோசடி செய்ததாக நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரமாணப் பத்திரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதைத் தடுக்க அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டதுடன், சஹானியின் விண்ணப்பத்தையும் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories