திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

hindumunnani
hindumunnani

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

இன்று( 01.12.25 ) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இது முருகனின் அருளால், முருக பக்தர்களின் வேண்டுதால், இந்து வழக்கறிஞர்கள் முயற்சியால் கிடைத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பானது நீதியை நிலைநாட்டியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைதீபத்திற்காக போராடி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த அட்வகேட் அமரர் திரு. ராஜகோபாலன் அவர்களின் ஆன்மாவிற்கு கிடைத்த வெற்றி.

தனது தீர்க்கதரிசனத்தால் இந்து சமுதாயத்திற்கு போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இன்றும் தெய்வமாக இருந்து வழிநடத்தி வரும் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்களின் கனவு நனவாகியுள்ளது.

எப்படி பிரிட்டிஷ் காலத்தில் 12.5.1931இல் இலண்டன் பிரிவ்யூ கவுன்சில் இந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. சுதந்திர பாரதத்தில் 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் அந்த தீர்ப்பை ஊர்ஜிதப் படுத்தி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளது.

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

அதே போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1996இல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு தந்தது. அதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஊர்ஜிதப்படுத்தி தீபம் ஏற்ற உத்தரவு தந்துள்ளது.

இதற்காக குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும், வீடுதோறும் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் படித்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிமையான செய்தி ஆகும்.

இதற்காக சட்ட ரீதியாக போராடிய இந்து வழக்கறிஞர்கள் முன்னணி மற்றும் இதன் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய ஊடகத்தினர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இது முருகனின் வெற்றி. தர்மத்தின் வெற்றி. மக்களின் வெற்றி.
எனவே பக்தர்களின் உணர்வுகளை மதித்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

இந்த ஆண்டு திருவண்ணாமலை போல திருப்பரங்குன்றம் மலை தீபத்தை கண்டு முருகனுக்கு அரோகரா என்று விண்ணதிர முழங்கிட லட்சக்கணக்கான முருக பக்தர்களே மகிழ்வுடன் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories