திருப்பரங்குன்றம் தீபம் தொடர்பில் நீதிமன்றம் ஆணை; முருக பக்தர்களுக்கு வெற்றி!

hindumunnani
hindumunnani

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் ஆணை. முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி என்று, இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

இன்று( 01.12.25 ) திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற அனுமதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது. இது முருகனின் அருளால், முருக பக்தர்களின் வேண்டுதால், இந்து வழக்கறிஞர்கள் முயற்சியால் கிடைத்த தீர்ப்பு. இந்த தீர்ப்பானது நீதியை நிலைநாட்டியுள்ளது.

திருப்பரங்குன்றம் மலைதீபத்திற்காக போராடி தன் இன்னுயிரைத் தியாகம் செய்த இந்து முன்னணி மாநிலத் தலைவராக இருந்த அட்வகேட் அமரர் திரு. ராஜகோபாலன் அவர்களின் ஆன்மாவிற்கு கிடைத்த வெற்றி.

தனது தீர்க்கதரிசனத்தால் இந்து சமுதாயத்திற்கு போராட வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தி இன்றும் தெய்வமாக இருந்து வழிநடத்தி வரும் வீரத்துறவி இராம. கோபாலன் அவர்களின் கனவு நனவாகியுள்ளது.

எப்படி பிரிட்டிஷ் காலத்தில் 12.5.1931இல் இலண்டன் பிரிவ்யூ கவுன்சில் இந்த திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது. சுதந்திர பாரதத்தில் 2025 ஆம் ஆண்டில் அக்டோபர் 10 ஆம் தேதி அன்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மீண்டும் அந்த தீர்ப்பை ஊர்ஜிதப் படுத்தி திருப்பரங்குன்றம் மலை முழுவதும் முருகனுக்கு சொந்தம் என்று கூறியுள்ளது.

அதே போல் 30 ஆண்டுகளுக்கு முன்பு 1996இல் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற நீதிமன்றம் உத்தரவு தந்தது. அதனை இன்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை ஊர்ஜிதப்படுத்தி தீபம் ஏற்ற உத்தரவு தந்துள்ளது.

இதற்காக குரல் கொடுத்த திருப்பரங்குன்றம் மக்களுக்கும், முருக பக்தர்களுக்கும், வீடுதோறும் தீபம் ஏற்றி கந்தசஷ்டி கவசம் படித்த அனைவருக்கும் நீதிமன்றத்தின் தீர்ப்பு இனிமையான செய்தி ஆகும்.

இதற்காக சட்ட ரீதியாக போராடிய இந்து வழக்கறிஞர்கள் முன்னணி மற்றும் இதன் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க உதவிய ஊடகத்தினர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

இது முருகனின் வெற்றி. தர்மத்தின் வெற்றி. மக்களின் வெற்றி.
எனவே பக்தர்களின் உணர்வுகளை மதித்து, நீதிமன்றத்தின் தீர்ப்பை தமிழக அரசும், தமிழக இந்து சமய அறநிலையத்துறையும், கோவில் நிர்வாகமும் காவல்துறையும் அரசு அதிகாரிகளும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு திருவண்ணாமலை போல திருப்பரங்குன்றம் மலை தீபத்தை கண்டு முருகனுக்கு அரோகரா என்று விண்ணதிர முழங்கிட லட்சக்கணக்கான முருக பக்தர்களே மகிழ்வுடன் கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம். – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

Topics

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்… தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

தமிழ் மக்கள் யாரை மன்னிக்கவில்லை என்றாலும் ஒரு நடிகனை கண்டிப்பாக மன்னிப்பார்கள்.. வாழ்த்துகள்!

Entertainment News

Popular Categories