கேன்ஸ் திரைப்பட விழா மேடையில் பேசிய நடிகர் மாதவன், பிரதமர் மோடியின் டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த விமர்சனம் வைரலாகி வருகிறது.
இந்தியாவுக்கே பெருமை சேர்க்கும் வகையில், நடிகர் R மாதவனின் ராக்கெட்ரி திரைப்படம் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் மே 19 வியாழன் அன்று திரையிடப்பட்டது.
ஏ.ஆர்.ரஹ்மானும், இயக்குநர் சேகர் கபூரும் சமூக ஊடகங்களில் ராக்கெட்ரிக்கு பாராட்டுகளைப் பொழிந்தனர். ஆர் மாதவன் நடித்து இயக்கிய இப்படம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இப்படம் ஜூலை 1ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படம் ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக கடந்த 1994-ம் ஆண்டு கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் (Nambi Narayanan). பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அவரது வாழ்க்கையில் நிகழ்வை மையமாக கொண்டு மாதவன் இயக்கி நடித்துள்ளார். இதில் சிம்ரன் மூன்றாவது முறையாக மாதவனுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
கேன்ஸ் விழாவில் பேசிய மாதவன் பிரதமர் மோடியின் பொருளாதார கொள்கை குறித்து பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் பகிர்ந்துள்ள வீடியோவில் இந்தியப் பிரதமர், தனது பதவிக் காலத்தை தொடங்கியபோது, மைக்ரோ எகானமி மற்றும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தினார்.
உலகம் முழுவதும், ‘இது வேலை செய்யாது, இது ஒரு பேரழிவு’ என்று பொருளாதார சமூகம் மத்தியில் ஒரு கொந்தளிப்பு ஏற்பட்டது.
விவசாயிகள் மற்றும் சிறு கிராமங்களில் படிக்காத மக்களை எப்படி ஒரு சிறிய போன் அல்லது ஸ்மார்ட்போனைக் கையாள்வது மற்றும் கணக்கைக் கையாள வைப்பது,” என்று மாதவன் கூறியுள்ளார்.
மேலும் மைக்ரோ பொருளாதாரம் இந்தியாவில் ஒரு பெரிய பேரழிவாக இருக்கும் என்று கருதப்பட்டது. ஓரிரு ஆண்டுகளில் அந்த முழு கதையும் மாறியது, இந்தியா உலகில் நுண்ணிய பொருளாதாரத்தின் மிகப்பெரிய பயனர்களில் ஒன்றாக மாறியது, அது ஏன் நடந்தது என்பது உங்களுக்குத் தெரியும்.
ஏனென்றால், விவசாயிகள் தங்களுக்கு தொலைபேசி கிடைத்ததா என்பதை அறிய பயிற்றுவிக்க வேண்டிய அவசியமில்லை. அதுதான் புதிய இந்தியா” என்று மாதவன் கூறியுள்ளார்.
अभिनेता आर माधवन ने पीएम मोदी की माइक्रो-इकोनॉमी की तारीफ की, 'डिजास्टर' कहे जाने से लेकर प्रमाण तकhttps://t.co/rklYoS0cbk
— Office of Mr. Anurag Thakur (@Anurag_Office) May 20, 2022
via NaMo App pic.twitter.com/Px5fBF8Xkw