கேரள கடல் பகுதியில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ..

கேரள கடல் பகுதியில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினரும், கடலோர பாதுகாப்பு படையினரும் நடத்திய வேட்டையில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.பறிமுதல் செய்யப்பட்ட ஹொரோ யின் கடத்தலில் ஈடுபட்டவர்கள் இன்று கொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அவர்களிடம் மேலும் தீவிர விசாரணை நடத்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்

இந்தியாவிற்குள் கடல் வழியாக போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி, கேரள கடல் பகுதியில் நேற்று வருவாய் புலனாய்வு பிரிவினரும், கடலோர பாதுகாப்பு படையினரும் நடத்திய வேட்டையில் ரூ.1,526 கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை கடத்தி வந்ததாக 2 படகுகளும், அதில் இருந்த 20 பேரும் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் மிகப்பெரிய அளவில் போதை பொருள் சிக்கியிருப்பது இது 4-வது முறையாகும். இதற்கு முன்பும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருந்தாலும் இப்போது பெரிய அளவில் போதை பொருள் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தற்போது இந்த ஆபரேசன் எப்படி நடந்தது, அதிகாரிகள் போதை பொருள் கடத்தல் கும்பலை எப்படி? கைது செய்தனர் என்பது பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

இந்தியாவிற்குள் போதை பொருள் கடத்தலில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த கும்பல் ஈடுபடுவதை மத்திய உளவுத்துறை முதலில் கண்டுபிடித்தது. இதனை அவர்கள் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கும், கடலோர பாதுகாப்பு படையினருக்கும் தெரிவித்தனர்.இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் கடலோர பாதுகாப்பு படையினர் இணைந்து ஆபரேசன் கோஜ்பீன் என்ற திட்டத்தை உருவாக்கினர். இந்த திட்டத்தை நிறைவேற்ற திறமையான அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டனர்.அதிகாரிகள் குழு ஆப்கானிஸ்தானில் இருந்து இந்திய கடல் எல்லைக்குள் வரும் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்திய பெருங்கடல், வங்க கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகள் அனைத்தும் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டன.

சந்தேகப்படும் மீன்பிடி படகுகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். சுமார் 10 நாட்களுக்கு மேலாக அவர்கள் நடுக்கடலில் கொக்குபோல காத்திருந்தனர்.இந்த நேரத்தில் தான் கடலில் சூறாவளியும், கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதனை பொருட்படுத்தாமல் அதிகாரிகள் இரவு பகலாக காத்திருந்தனர். அவர்களின் காத்திருப்புக்கு நேற்று பலன் கிடைத்தது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வந்த கப்பலில் இருந்து சில மூட்டைகள் 2 மீன்பிடி படகுகளில் ஏற்றப்படுவதை கண்டனர். அந்த படகுகள் மூட்டைகளை ஏற்றியதும், அரபிக்கடல் பகுதிக்குள் புகுந்து கேரளா நோக்கி விரைந்தது.
அந்த படகுகளை விரட்டிச்சென்ற கடலோர பாதுகாப்பு படையினர் படகுகளை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். படகுக்குள் மீன்கள் எதுவும் இல்லை. மாறாக அங்கு மூட்டை மூட்டையாக போதை பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மொத்தம் 220 கிலோ ஹெராயின் இருந்தது.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

இந்த தகவல் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆபரேசன் சக்சஸ் ஆனதை தொடர்ந்து கைப்பற்றப்பட்ட போதை பொருள் கொச்சி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.கொச்சியில் வைத்து கைதானவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கைதான 20 பேரில் 16 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பறிமுதல் செய்யப்பட்ட 2 படகுகளும் குளச்சல் மற்றும் தூத்தூர் பகுதியைச் சேர்ந்தது என்று தெரிய வந்துள்ளது.

இதையடுத்து படகின் உரிமையாளர்களை பிடித்து விசாரிக்க வருவாய் புலனாய்வு அதிகாரிகள் குழுவினர் நேற்றிரவே குமரி மாவட்டம் வந்தனர். தூத்தூர் மற்றும் குளச்சல் பகுதிகளில் அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே நடுக்கடலில் கைது செய்யப்பட்ட குமரி மீனவர்கள் உள்பட 20 பேரையும் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இன்று கொச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது போதை பொருளை கேரளாவில் யார் யாருக்கு வழங்க இருந்தனர் என்பதை விசாரித்து அவர்களையும் கண்டுபிடிக்க முடிவு செய்துள்ளனர்.

IMG 20220521 113730 - 2026
202205211020121639 Tamil News Tamil News Rs 1526 crore worth of heroin seized in Kerala SECVPF - 2026
ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories