அனைத்து நாட்களிலும் கோயிலுக்குச் செல்ல அனுமதி கோரி, பாஜக., 7ம் தேதி ஆர்ப்பாட்டம்!

annamalai bjp2 - 2026

சென்னை : அனைத்து நாட்களிலும் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி வரும் 7ஆம் தேதி முக்கிய கோவில்களின் முன் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்று பாஜக., தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது…

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பும் காலை 11 மணிக்கு, நமது புனிதமான நவராத்திரியின் தொடக்க நாளன்று @BJP4TamilNadu மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

திருக்கோவில்களைத் திறக்க மக்களின் தீவிர வேண்டுகோள் தொடர்ச்சியாக இருந்தபோதிலும் சாதாரண மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊமையாக அரசாங்கம் உள்ளது. மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உணர்ச்சி யற்ற அரசாங்கம் இரண்டாவது அலையின் உச்சத்தில் TASMAC ஐ போலீஸ் பாதுகாப்போடு திறந்தது.

ஆனால் பக்தர்களுக்காக கோவில்கள் திறக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை. மேலும் கோவில்களைச் சார்ந்த தொழில் புரியும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.

இவ்வாறு குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது டிவிட்டர் பதிவில் ஓர் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். அதில்…

புனித நாளாக கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில், தி.மு.க., அரசு கோவில்களை மூடுகிறது.அதை மாற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்ற வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி.தடுக்க நினைப்பது, தீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

தமிழக அரசின் கோவில் பராமரிப்பு, அறநிலையமாக நடக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் வணிக நிறுவனமாக நடக்கக் கூடாது.கோவில் திறக்காது இருப்பதற்கு, கொரோனா நோயை காரணமாக சொல்வது நகைப்பிற்குரிய செயல். மாற்று மதங்களின் இறை வழிபாட்டு தலங்கள், எந்த இடையூறும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்குகின்றன என்பதை நிரூபிக்க, பல சான்றுகள் உள்ளன.

கோவிலை நம்பியிருக்கும் தேங்காய், பூ, பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் கோவில் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7ம் தேதி காலை 11:00 மணிக்கு முக்கிய கோவில்கள் முன், பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வர்.இந்த போராட்டத்தை, முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா ஒருங்கிணைக்கிறார்… என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

Topics

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

Entertainment News

Popular Categories