அனைத்து நாட்களிலும் கோயிலுக்குச் செல்ல அனுமதி கோரி, பாஜக., 7ம் தேதி ஆர்ப்பாட்டம்!

annamalai bjp2 - 2026

சென்னை : அனைத்து நாட்களிலும் கோவிலுக்குச் செல்ல அனுமதிக்கக் கோரி வரும் 7ஆம் தேதி முக்கிய கோவில்களின் முன் பாஜக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்துவர் என்று பாஜக., தமிழக தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது…

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க வலியுறுத்தி வரும் அக்டோபர் 7 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய கோவில்கள் முன்பும் காலை 11 மணிக்கு, நமது புனிதமான நவராத்திரியின் தொடக்க நாளன்று @BJP4TamilNadu மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

திருக்கோவில்களைத் திறக்க மக்களின் தீவிர வேண்டுகோள் தொடர்ச்சியாக இருந்தபோதிலும் சாதாரண மக்களின் வேண்டுகோளுக்கு செவிமடுக்காத ஊமையாக அரசாங்கம் உள்ளது. மக்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத உணர்ச்சி யற்ற அரசாங்கம் இரண்டாவது அலையின் உச்சத்தில் TASMAC ஐ போலீஸ் பாதுகாப்போடு திறந்தது.

ஆனால் பக்தர்களுக்காக கோவில்கள் திறக்கப்படுவதை மட்டும் விரும்பவில்லை. மேலும் கோவில்களைச் சார்ந்த தொழில் புரியும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது.

ALSO READ:  ‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

இவ்வாறு குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது டிவிட்டர் பதிவில் ஓர் அறிக்கையும் வெளியிட்டிருக்கிறார். அதில்…

புனித நாளாக கருதப்படும் வெள்ளி மற்றும் விடுமுறை நாட்களான சனி, ஞாயிற்று கிழமைகளில், தி.மு.க., அரசு கோவில்களை மூடுகிறது.அதை மாற்றி, அனைத்து நாட்களிலும் கோவில்களை திறக்க வேண்டும் என்ற வேண்டுகோள், செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. கோவில்களுக்கு சென்று கடவுளை வழிபடுவது, தமிழர்கள் வாழ்வியலின் ஒரு பகுதி.தடுக்க நினைப்பது, தீய எண்ணத்தின் சதியாக இருக்குமோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

தமிழக அரசின் கோவில் பராமரிப்பு, அறநிலையமாக நடக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தின் வணிக நிறுவனமாக நடக்கக் கூடாது.கோவில் திறக்காது இருப்பதற்கு, கொரோனா நோயை காரணமாக சொல்வது நகைப்பிற்குரிய செயல். மாற்று மதங்களின் இறை வழிபாட்டு தலங்கள், எந்த இடையூறும் இல்லாமல், அனைத்து நாட்களிலும் அரசின் மறைமுக ஆதரவுடன் இயங்குகின்றன என்பதை நிரூபிக்க, பல சான்றுகள் உள்ளன.

கோவிலை நம்பியிருக்கும் தேங்காய், பூ, பழம் விற்பவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் கோவில் செல்ல அனைவரையும் அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 7ம் தேதி காலை 11:00 மணிக்கு முக்கிய கோவில்கள் முன், பா.ஜ., நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் செய்வர்.இந்த போராட்டத்தை, முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா ஒருங்கிணைக்கிறார்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories