உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டனில் இந்தியாவின் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். சீனாவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஐப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாதனை படைத்தார் சிந்து.
ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்ற போட்டியில் பிவி சிந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். பிடபிள்யுஎஃப் உலக டூர்ஸ் ஃபைனல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் பிவி சிந்து.
நொஸோமி ஒகுஹாராவுடன் நடைபெற்ற இந்தப் போட்டியில், பிவி சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட்டில் வென்று இந்த வருடத்தில் அவரது முதல் பட்டத்தை சிந்து பெற்றுள்ளார்.