வைகுண்ட ஏகாதசி ஸ்பெஷல்: நவதிருப்பதி பெருமாள்களின் சயன சேவை..!
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி நதி பாயும் இருபுறக் கரைகளிலும் கோயில் கொண்டுள்ள ஸ்ரீவிஷ்ணு ஆலயங்கள், நம்மாழ்வாரால் பாடப் பெற்றவை.
நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற நவதிருப்பதி பெருமான்களுக்கும் வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சயனத் திருக்கோலம் அலங்காரம் செய்யப் படும். அந்த அலங்காரங்களைத்தான் நீங்கள் இங்கே தரிசிக்கிறீர்கள்.
நவதிருப்பதி பெருமான்கள்… வரிசையாக…
நவ திருப்பதிகள்: நவகிரகங்களுடன் தொடர்புடைய நவதிருப்பதிகள் பின்வருமாறு:
- சூரியன்: திருவைகுண்டம்
- சந்திரன்: திருவரகுணமங்கை
- செவ்வாய்: திருக்கோளூர்
- புதன்: திருப்புளிங்குடி
- குரு: ஆழ்வார்திருநகரி
- சுக்கிரன்: தென்திருப்பேரை
- சனி: பெருங்குளம்
- ராகு: இரட்டை திருப்பதி (தேவர்பிரான்)
- கேது: இரட்டை திருப்பதி (அரவிந்தலோசனர்)