நெல்லை மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. வழக்கத்துக்கு மாறாக நெல்லை மாவட்ட மலைப் பகுதி கிராமங்களில் பனி மூட்டம் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர்.
செங்கோட்டை, புளியரை சுற்று வட்டார பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வழக்கத்தை விட கடுமையான பனி மூட்டம் நிலவியது.
இதனால் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாததால் சாலைகளில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்!