தென்காசி திருவள்ளுவர் கழக செயலர் சிவராமகிருஷ்ணன் காலமானார்!

sivaramakrishnan sankarasramam - 2026
#image_title

ஐந்தருவி சங்கராசிரமத்தின் மேனேஜிங் ட்ரஸ்டியும், தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலரும், தமிழ்ச் செம்மலும், சித்தவித்தை செம்மலும் ஆகிய பிரம்மஸ்ரீ .ஆ. சிவராமகிருஷ்ணன் அவர்கள் தமது 93 ஆம் வயதில் மகா சமாதியடைந்தார்கள். அவர்களது சமாதி நிகழ்வுகள் ஐந்தருவி சங்கராஸ்ரமத்தில் வைத்து நாளை மதியம் (09.6.023) 1 மணி முதல் 2 மணி வரை நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்வதாக ஆஸ்ரம நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அன்னாரின் தமிழ் சேவையும் ஆன்மீகச் சேவையும் மிகவும் உன்னதமானதும் உயர்ந்ததும் ஆகும். தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் செயலராக சுமார் 60 ஆண்டு காலம் மிகச் சிறப்பாக பணியாற்றியவர். ஐந்தருவி சங்கராசிரமத்தின் தலைவராகவும் மேனேஜிங் டிரஸ்டியாகவும் சுமார் 50 ஆண்டுகாலம் அர்ப்பணிப்போடு பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ சங்கரானந்தர் குரு நிழலில் அவரது ஆன்மா இளைப்பாற பிராத்திக்கிறோம்… என்று ஆஸ்ரமத்தின் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது.

தென்காசியில் 1927ல் தொடங்கப்பட்டு, தற்போது 96 ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறது திருவள்ளுவர் கழகம். இதன் செயலாளராக இருந்தவர் சிவராமகிருஷ்ணன் . 93 வயதான இவர் தனது 13 வயதிலேயே இந்தக் கழகத்திற்காக உழைக்கத் தொடங்கினார். கடந்த 63 ஆண்டுகளாக தொடர்ந்து செயலாளராக பொறுப்பில் இருந்து வந்துள்ளார்.

திருவாசகம் முற்றோதுதல் நடப்பது போல திருக்குறள் முற்றோதுதல் என்ற முறையை அறிமுகப்படுத்தியவரும் இந்த கழகத்தில் உள்ள நூலகத்தை தொடங்கியவரும் சிவராமகிருஷ்ணன் தான்.

தற்போது தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் 97வது திருக்குறள் விழா ஏற்பாட்டுகளைக்கூட முழு முனைப்புடன் செய்து வந்தார். 80 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு அமைப்பில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வந்துள்ளார் சிவராமகிருஷ்ணன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories