ஆரவாரமின்றி… அமைதியாக… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் திருமணம்! ஆச்சரியப் பதிவுகள்!

nirmala sitharaman daughter marriage - 2026
#image_title

கெளரி கல்யாணம் வைபோகமே! ஒரு ஆரவாரம் இல்லை, சத்தமில்லை, களேபரமில்லை, பேனர் இல்லை, மாபெரும் பந்தல் இல்லை, நாள் கணக்கில் விருந்து இல்லை, மாபெரும் தலைவர்கள் வரவில்லை…. இப்படி எத்தனையோ இல்லை இல்லை இல்லை ரகம்தான்! ஆனால் ஒரு மங்கல நிகழ்வுக்கான அனைத்தும் அங்கே நிறைந்திருந்தது.

இவ்வளவுக்கும் அவருக்கு அப்பெண் ஒரே மகள்தான். நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இல்ல திருமணம் பற்றிய பதிவினைத்தான் பலரும் வியந்து போய் சமூகத் தளங்களில் இன்று பதிவிட்டு வருகிறார்கள்.

நிர்மலா சீதாராமனின் ஒரே மகள் ப்ரகலா வாங்மயிக்கும் ப்ரதீக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெங்களூர் தனியார் ஹோட்டலில் ஜூன் 7ம் தேதி புதன்கிழமை நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண வைபவத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்ட உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்தர் சுவாமிகள் மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். அரசியல் வாடையே இல்லாமல் எளிமையிலும் எளிமையாக இந்தத் திருமணம் ஆன்மிக முக்கியத்துவத்துடன் நடைப் பெற்றுள்ளது பலரையும் வாய்பிளந்து பார்க்க வைத்துள்ளது.

திருச்சியின் செல்லமகளான நிர்மலா சீதாராமனின் செல்ல மகளுக்கு நடந்த திருமணம் பற்றி சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ள பலரும் தங்களது ஆசிகளையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மணிப்பூர்

உலகின் மிக சக்திவாய்ந்த ஒரு நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஒரே மகளின் திருமணம் நேற்று பெங்களூரில் நடந்தது. தலைவர்கள் இல்லை, தொழில்அதிபர்கள் இல்லை, மேடை அலங்காரம் இல்லை. (கவனிக்க ஜமக்காளம், பின்புறம் தொங்கும் பூச்சரம் .. ) முக்கியமாக குத்து டான்ஸ் இல்லை, லெக்கிங்ஸ் போட்ட மாமிகள் இல்லை, பெர்முடாஸ் , டீ சர்ட் மாமாக்கள் இல்லை.. பாழ் நெற்றி, தலைவிரி கோலத்தில் லெஹங்காக்குள் (உரலுக்கு உரை போட்ட மாதிரி) திரியும் ஐடி மகள், மாட்டுப்பெண்கள் இல்லை… இரண்டு அகத்து வாத்தியார்.. அப்புறம் அந்த உடுப்பியோ, சிருங்கேரி மடாதிபதியோ அனுப்பிய வஸ்திரம்… ஓதி இடறதுகூட இருந்திருக்காது! – என்று ஒருவர் ஆச்சரியத்துடன் பதிவு செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories