ஆரவாரமின்றி… அமைதியாக… நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் திருமணம்! ஆச்சரியப் பதிவுகள்!

nirmala sitharaman daughter marriage - 2026
#image_title

கெளரி கல்யாணம் வைபோகமே! ஒரு ஆரவாரம் இல்லை, சத்தமில்லை, களேபரமில்லை, பேனர் இல்லை, மாபெரும் பந்தல் இல்லை, நாள் கணக்கில் விருந்து இல்லை, மாபெரும் தலைவர்கள் வரவில்லை…. இப்படி எத்தனையோ இல்லை இல்லை இல்லை ரகம்தான்! ஆனால் ஒரு மங்கல நிகழ்வுக்கான அனைத்தும் அங்கே நிறைந்திருந்தது.

இவ்வளவுக்கும் அவருக்கு அப்பெண் ஒரே மகள்தான். நமது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இல்ல திருமணம் பற்றிய பதிவினைத்தான் பலரும் வியந்து போய் சமூகத் தளங்களில் இன்று பதிவிட்டு வருகிறார்கள்.

நிர்மலா சீதாராமனின் ஒரே மகள் ப்ரகலா வாங்மயிக்கும் ப்ரதீக் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் பெங்களூர் தனியார் ஹோட்டலில் ஜூன் 7ம் தேதி புதன்கிழமை நேற்று எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமண வைபவத்தில் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்தத் திருமண விழாவில் கலந்து கொண்ட உடுப்பி அதமாரு மடத்தின் விஸ்வபிரிய தீர்த்தர் சுவாமிகள் மணமக்களுக்கு பிரசாதம் வழங்கி ஆசீர்வாதம் செய்தார். அரசியல் வாடையே இல்லாமல் எளிமையிலும் எளிமையாக இந்தத் திருமணம் ஆன்மிக முக்கியத்துவத்துடன் நடைப் பெற்றுள்ளது பலரையும் வாய்பிளந்து பார்க்க வைத்துள்ளது.

திருச்சியின் செல்லமகளான நிர்மலா சீதாராமனின் செல்ல மகளுக்கு நடந்த திருமணம் பற்றி சமூகத் தளங்களில் பதிவு செய்துள்ள பலரும் தங்களது ஆசிகளையும் வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

உலகின் மிக சக்திவாய்ந்த ஒரு நாட்டின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஒரே மகளின் திருமணம் நேற்று பெங்களூரில் நடந்தது. தலைவர்கள் இல்லை, தொழில்அதிபர்கள் இல்லை, மேடை அலங்காரம் இல்லை. (கவனிக்க ஜமக்காளம், பின்புறம் தொங்கும் பூச்சரம் .. ) முக்கியமாக குத்து டான்ஸ் இல்லை, லெக்கிங்ஸ் போட்ட மாமிகள் இல்லை, பெர்முடாஸ் , டீ சர்ட் மாமாக்கள் இல்லை.. பாழ் நெற்றி, தலைவிரி கோலத்தில் லெஹங்காக்குள் (உரலுக்கு உரை போட்ட மாதிரி) திரியும் ஐடி மகள், மாட்டுப்பெண்கள் இல்லை… இரண்டு அகத்து வாத்தியார்.. அப்புறம் அந்த உடுப்பியோ, சிருங்கேரி மடாதிபதியோ அனுப்பிய வஸ்திரம்… ஓதி இடறதுகூட இருந்திருக்காது! – என்று ஒருவர் ஆச்சரியத்துடன் பதிவு செய்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories