வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்த்து தமிழகத்தை சேர்ந்த 111 விவசாயிகள் வாராணசி தொகுதியில் போட்டியிடப் போவதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யாகண்ணு தெரிவித்துள்ளார்.
22 ஆம் தேதி வாரணாசி தொகுதிக்கு அரை நிர்வாணமாகச் சென்று அங்கு வேட்பு மனு தாக்கல் செய்கிறோம்”என்றார் அவர்
இந்நிலையில், அய்யாக்கணுவின் வேஷம் கலைந்துவிட்டது என்றும் அவர் திமுக.,வின் கைக்கூலி என்றும் ஒரு படத்தைப் பகிர்ந்து சிலர் பதிவிட்டு வருகின்றனர்.
அநதப் பதிவுகளில்…அய்யாகண்ணு விவசாயி கிடையாது திமுகவின் கைக்கூலி என்று இங்கே பலர் சொன்னதை போராளிகள் மறந்து இருப்பாங்க….
இப்ப பாருங்கள் ஏரியை வளைத்து, விவசாய நீர் ஆதாரத்தை அழித்து, SRM பல்கலைக்கழகம் கட்டி,கோடி கோடியாக மாணவர்களிடம் கட்டணம் வாங்கி கொள்ளையடித்த புதிய தலைமுறை கார்ப்பரேட் ஊடக ஓனர் பெரம்பலூர் ஐஜேகே வேட்பாளர் பச்சைமுத்துவை ஆதரித்து ஸ்டாலினுடன் மேடையில் பிரச்சாரம் செய்கிற அசிங்கத்தை அய்யாகண்ணு செய்வதை பாருங்கள்
அரசியல் சார்பற்ற நடுநிலை விவசாயி இப்படி செய்வானா? -என்று கேள்வி எழுப்புகின்றனர்.