வயதான காலத்தில்.. அத்வானிக்கு கௌரவம் தந்த பாஜக.,!

modi advani1 - 2026

பா.ஜ.க தலைவர் அமித் ஷா, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானியின் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார். இது குறித்த தகவல் நேற்று வெளியானது.

17வது மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக., முதல் கட்ட பட்டியல் நேற்று வெளியானது. இந்தப் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வாராணசி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அடுத்து, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியானது. இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காந்திநகர் தொகுதி, பாஜக.,வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி போட்டியிடும் தொகுதி. தற்போதைய தொகுதியின் எம்.பி., அவர்.

amith sha advani - 2026

இந்நிலையில், காந்தி நகர் தொகுதியில் அமீத் ஷா போட்டியிடுவதால், எல்.கே. அத்வானி கட்சியில் இருந்து ஓரங்கட்டப் பட்டார் என்றும், மூத்த தலைவர்களுக்கு பாஜக.,வில் தரும் மரியாதை இதுதான் என்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஆதரவாளர்களும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர்.

ALSO READ:  பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

ஆனால், எல்.கே. அத்வானிக்கு தற்போது 91 வயது ஆகிறது.  வயதான காலத்தில் கட்சியினர் மதிக்கும் மூத்த தலைவரான அத்வானியை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வைத்து, அவருக்கு சிரமத்தைக் கொடுக்க அமித்ஷாவோ, மோடியோ விரும்பவில்லை என்று கூறப் படுகிறது.

எனவே, அத்வானிக்கு மாநிலங்களவை சீட் வழங்க பா.ஜ.க தலைமை முடிவு செய்தது. இதனை அத்வானியிடம் கூற, அவரும் இதற்கு ஓகே. சொல்லிவிட்டார்.

இதை அடுத்தே, குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த அமித் ஷா, தனது தொகுதியிலேயே போட்டியிட அவரே வழி சொல்லியிருக்கிறார் என்கின்றனர் பா.ஜ.க வினர்.!

இதே போல், மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோரும் தாங்கள் இந்த முறை போட்டியிடப் போவதில்லை என்று கூறியிருக்கின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஆக.2 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories