அண்மையில் காலமான நகைச்சுவை அரசர், நாடக மேடை எழுத்தாளர் கிரேசி மோகனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
சென்னை நாடக சபைகளின் கூட்டமைப்பு, தமிழ் மேடை நாடக தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை சார்பில் மறைந்த நாடக நடிகர், எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா கிரேசி மோகனுக்கு புகழ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது.
சென்னை ஆழ்வார்பேட்டையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், மாது பாலாஜி, டிவி வரதராஜன், ஒய்ஜி மகேந்திரன் மற்றும் நாடகத் துறையை சேர்ந்த பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்!