ஒடிசா மாநிலம் கேண்டிரபரா அருகேயுள்ள சாசன் கன் பகுதியில் அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு பணிபுரியும் பணியாளர்களின் அலட்சியத்தால், குழந்தை ஒன்று, எட்டு மணிநேரமாகப் பூட்டிக்கிடந்த அங்கன்வாடி மையத்திற்குள் இருந்துள்ளது.
குழந்தையின் அழுகுரல் கேட்டது.இதனை செவியுற்ற அங்கிருந்த மக்கள் அங்க்ன்வாடியுள்ளிருந்து அந்த சத்தம் வந்ததை அறிந்தவுடன் , பூட்டை உடைத்து குழந்தையை மீட்டனர். குழந்தையைத் தேடிக் கொண்டிருந்த பெற்றோர்களிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
இங்கு பணியாற்றும் ஊழியர்களின் அலட்சியப்போக்கே, இச்சம்பவத்திற்கான காரணம் என கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவ்விடத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவியது.