சில மாதங்களுக்கு முன்பு நித்யா மேனன் நடிப்பில் ‘பிராண’ என்கிற மலையாளப்படம் வெளியானது.
படம் பெரிய அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.நித்யா மேனன் நடிப்பு மட்டும் பாராட்டைப் பெற்றது. இந்த நிலையில் மீண்டும் மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கயிருக்கிறார் நித்யா மேனன்.
உண்மை சம்பவங்களின் அடிப்படையாக கொண்ட ஒரு கிரைம் திரில்லராக உருவாக இருக்கிறதாம்.இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை. படத்தை இயக்கும் அஜய் தேவலோகா அவருக்கு நெருங்கிய வட்டாரத்தில் நடைபெற்ற ஒரு உண்மை சம்பவத்தை தான் படமாக்குகிறார்.கதையில் வரும் துணிச்சலான, தைரியமான பெண் கதாபாத்திரத்திற்கு நித்யா மேனன் தான் பொருந்துவார் என அவரை இதற்கு தேர்ந்தெடுத்தாக கூறுகிறார் இயக்குனர். கதையைக் கேட்டதும் நித்யா மேனனும் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்” என்றும் கூறியுள்ளார்
இயக்குனர் அஜய் தேவலோக்.இந்த உண்மை சம்பவம் பற்றி வில்லன் நடிகரான ஷைன் டாம் சாக்கோவிடம் கூறியிருக்கிறார். அவரும் இந்த கதையை புகழ்ந்து அதனை படமாக்க ஊக்கம் கொடுத்தாராம் அதனால் அவரையே இந்த படத்தில் கதையின் நாயகனாக ஒரு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கும்படி சொல்லிவிட்டாராம்.