
ஊழல் புகார் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் தொடர்பாக நாடு முழுவதுமுள்ள பல்வேறு பகுதிகளில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.
பணமோசடி, ஊழல் புகார் உள்ளிட்ட வெவ்வேறு 30 வழக்குகளை சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்துவருகின்றனர்.
இந்நிலையில், அவ்வழக்குகள் தொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 10 பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் தற்போது அதிரடி ஆய்வை மேற்கொண்டுவருகின்றனர்.
சுமார் 110 இடங்களில் இந்தச் சோதனையானது நடைபெற்றுவருகிறது.


