நான் #இருபது வருடங்களில் பார்த்த மோசமான சாரல் சீசன் 2019. #புண்ணியதலமான குற்றாலத்தை பாவத் தலம் ஆக்கி விட்டனர்.
மது குடிக்க #கூத்தியாளுடன் கூத்தாட பாலியல் தொழிலாளர்களுடன் உறவாட அரவாணிகளுடன் ஆனந்தமாயிருக்க குற்றாலத்திற்கு வருகின்றனர். ஆறிலிருந்து அறுபது வரை #குடித்து விட்டு தள்ளாடுகிறது.
#பணமிருந்தால் என்ன வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம் என வருபவர்களும் #பணம் குடுத்தால் அவர்கள் செய்வதையெல்லாம் சகித்துக் கொள்ளுபவர்களும் இருக்கும் வரை சீசன் மண்ணாய்த்தான் போகும்.
வருபவர்களும் இருப்பவர்களும் #சுய ஒழுக்கம் பின்பற்றினால் மட்டுமே சீசன் சிறப்படையும். இதெல்லாம் நமக்கு குற்றாலநாதர் காட்டும் #ட்ரையல் தான்.
முழிச்சவன் திருந்திக்கணும்! முழிக்காதவன் அவனே முடிஞ்சிருவான். விக்கவும் முடியாம கக்கவும் முடியாம மரண அடியை எதிர்நோக்கியிருக்கும் #சார்ந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் செவுள்ள நாலு அப்பு அப்பி தர்மத்தை நிலைநாட்டும் #ஈசனுக்கு நிகர் ஈசனே!!
#சாரல் சீசன் 2019#
– மெயின்அருவி தெனாலி ராமன் என்பவர் தம் பேஸ்புக் பதிவில் பகிர்ந்துள்ள மனம் நொந்த பதிவு…