நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் சூர்யா அடுத்ததாகா கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
அயன், மாற்றான் படங்களை அடுத்து மீண்டும் இணையவுள்ள சூர்யா-கே.வி. ஆனந்த் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் கார்ப்பரேட் பிசினஸ்மேன் கேரக்டரில் நடிக்க ஒரு நடிகர் தேவைப்படுவதாகாவும், 27 முதல் 40 வயதுக்குள் ஸ்மார்ட்டாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 18 முதல் 30 வரையிலான இளைஞர்களும் தேவைப்படுவதாகவும் விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற இமெயிலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் படக்குழுவினர் விளம்பரம் செய்துள்ளனர்.