அரசு பள்ளிகளில் இந்தியை விருப்பப்பாடமாக சேர்க்க ஆசிரியர் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
5, 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை ரத்து செய்து அறிவித்த நிலையில் தற்பொழுது அமைச்சர் செங்கோட்டையன்
பொதுத்தேர்வுக்காக 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களிடன் ஆசிரியர்கள் வசூலித்த தேர்வு கட்டணத்தை திரும்ப அளிக்க வேண்டும். தேர்வு ரத்தானதால் அந்த தொகையை திரும்ப தருவதுதான் ஆசிரியர்களின் கடமை’ என்று கூறியுள்ளார்.
இந்தியை அரசு பள்ளிகளில் விருப்பப்பாடமாக சேர்ப்பது குறித்த ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கைக்கு பதில் அளித்த அவர் பாடத்திட்டத்தில் உள்ள பாடங்களை சரியாக நடத்தினால் போதும் என கூறியுள்ளார்.