வைகோ இப்போது தேர்தல் நிதி வாங்க தொடங்கியுள்ளார் மதிமுக.,வினரிடம் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் நிதி பெற தொடங்கியுள்ளார். யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே… என்பதுபோல் தேர்தல் வரும் பின்னே நிதி திரட்டல் வரும் முன்னே என்பது போல் நிதி திரட்டுகிறார் வைகோ.
தூத்துக்குடி மதிமுக தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் முதல் கட்ட தேர்தல் நிதியாக ரூபாய் ஐந்து லட்சத்து நூறு ரூபாயை (5,00,100) கழக பொதுச் செயலாளரிடம் மாவட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை செல்வம் வழங்க அதனை பெற்றுக்கொண்டார் வைகோ.