பெண்ணிடம் இருந்து மைக்கை ஆவேசமாக பறித்த சித்தராமையாவால் சர்ச்சை ஏற்பட்டது. அதில், அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் கையோடு வந்ததால் மேலும் சர்ச்சை ஆனது!
கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவிடம் பெண் ஒருவர் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். இதனால் கடுப்பான சித்தராமையா மிகவும் உணர்ச்சி வசப்பட்டார்.
ஆவேசத்துடன், வாயை மூடிக்கொண்டு கீழே உட்கார் என்று சித்தராமையா கத்திய போதும், அந்தப் பெண் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
இதனால் பொறுமை இழந்த சித்தராமையா, அந்தப் பெண் கையில் வைத்திருந்த மைக்கை வேகமாகப் பறித்தார். அப்போது, அந்தப் பெண்ணின் துப்பட்டாவும் சித்தராமையாவின் கையோடு வந்து விட்டது.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணிடம் அநாகரிகமாக சித்தராமையா நடந்து கொண்டிருப்பதாக பாஜக தலைவர் ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.