spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?எப்படி வந்தது ‘வேலன்’டின்ஸ் டே? : இதோ ஒரு புராண வரலாறு

எப்படி வந்தது ‘வேலன்’டின்ஸ் டே? : இதோ ஒரு புராண வரலாறு

- Advertisement -

வேலன் தினை தின்ன தினம்  இன்று- அதுவே பின்னாளில் வேலன் தின் டே ஆகி, வேலண்டைன் டே என்று மருவியது.

”வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான் புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்”’ ….”’வேலன் தின் நாள்”’.: 14-2-18..

இதுவே தற்போது ”காதலர் தினம்” எனப்படுகிறது. வேலன் முருகன் வள்ளி குறத்தியைக் காதல் மணம் செய்யும் நினைப்பில் கிழவன் வடிவம் தாங்கி வர,பின்பு தமது காதல் நிறைவேற தம் அண்ணன் ஆனைமுகன் துணையுடன் வள்ளியை காதல் திருமணம் செய்தது நாம் அறிந்ததே.

இப்படியான வள்ளி உடனான இந்த காதல் விளையாட்டில் கிழவராக வடிவெடுத்து வந்த அழகன் வேலவன் வள்ளியிடம் காதல் பசியில் உண்ண உணவு கேட்க ,உடனே வள்ளி குறத்தி தம் வீட்டில் இருந்த தினை மாவுதனை உண்ண[தின்ன] கொடுத்தாள்…வள்ளி காதல் மயக்கத்தில் வேலனுக்கு தின்ன கொடுத்த நன்னாள் ”வேலன் தின் டே”என்றாகி, ”வேலன் வள்ளிகுறத்தி கொடுத்த தினையினை தின்ன நாள்”.

எனவே வேலன் தின் நாளில் அருகில் உள்ள சிவாலயங்கள், முருகன் ஆலயம்களுக்கு சென்று நம் காதல் சிவனாரின் நெற்றி கண்ணில் வந்த தமிழ் காதலன், வள்ளி குறத்தி மணவாளன் முருகப்பெருமானுக்கு 6 நெய் தீபம் ஏற்றி,தினை மாவு நெய்வேத்தியம் செய்து வேண்டியன கேட்டுப் பெறுவோம்.

குற வள்ளி தினைப்புனம் காத்த இடமாக வேளிமலை[கன்னியாகுமரிஅருகில்] , வள்ளிமலை [திருத்தணிஅருகில் ], வள்ளியூர் [திருநேல்வேலி அருகில்] நடந்ததாக குறிப்பிடுகிறார்கள்.

”பால்மொழி படித்துக் காட்டி ஆடையை நெகிழ்த்துக் காட்டி பாயலி லிருத்திக் காட்டி
யநுராகம் பாகிதழ் கொடுத்துக் காட்டி நூல்களை விரித்துக் காட்டி பார்வைகள் புரட்டிக் காட்டி ……
யுறவாகி மேல்நக மழுத்திக் காட்டி தோதக விதத்தைக் காட்டி மேல்விழு நலத்தைக் காட்டு ……
மடவார்பால் மேவிடு மயக்கைத் தீர்த்து சீர்பத நினைப்பைக் கூட்டு மேன்மையை யெனக்குக் காட்டி ……
யருள்வாயே காலனை யுதைத்துக் காட்டி யாவியை வதைத்துக் காட்டி காரணம் விளைத்துக் காட்டி ……
யொருக்காலங் கானினில் நடித்துக் காட்டி யாலமு மிடற்றிற் காட்டி காமனை யெரித்துக் காட்டி ……
தருபாலா மாலுற நிறத்தைக் காட்டி வேடுவர் புனத்திற் காட்டில் வாலிப மிளைத்துக் காட்டி ……
அயர்வாகி மான்மகள் தனத்தைச் சூட்டி ஏனென அழைத்துக் கேட்டு வாழ்வுறு சமத்தைக் காட்டு ……
பெருமாளே”[அருணகிரிநாதர்].

தேன், தினை மாவு படைத்து இந்நன்னாளில் முருகப்பெருமானை வழிபட இல்வாழ்க்கை சிறக்கும்; காதலில் வெற்றி கிட்டும்;மனப் பிணக்கு உள்ள தம்பதிகள் இணக்கமாவர்.

மேற்கண்ட அருணகிரிநாதரின் திருப்புகழை அனுதினமும் மும்முறை பாராயணம் செய்து வருவது ரெட்டிப்பு நற்பயன்களை கொடுக்கும் என்கிறார்கள்.

கட்டுரையாக்கம்: ப்ரியமுடன்: அகஸ்தீஸ்வரம்” பாகம்பிரியாள் மாதொருபாகன்” வழிவழி அடிமை சிவ.அ. விஜய் பெரியசுவாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe