தலைமுடி உதிராமல் இருக்க…
வெந்தயத்தை அரைத்து தலையில் பூசி ஊற வைத்துக் குளிக்க முடி உதிர்வது நிற்கும். முடி பளபளக்கும்.
வெள்ளெழுத்து வந்து விட்டதா?
கொத்துக்கடலையை முளைக்கச் செய்து பக்குவப்படுத்தி நாற்பது நாள்கள் சாப்பிட்டு வர வெள்ளெழுத்து குணமாகும்.
குதிகால் வலி, எரிச்சலுக்கு…
செங்கல்லை சூடாக்கி அதன் மேல் ஓர் எருக்கன் பழுப்பு இலையைப் போட்டு அந்த இலையின் மேல் குதிகாலை வைக்க வேண்டும்.
இரவில் குதிகாலில் சிற்றாமணக்கு எண்ணெய் தடவி வர வேண்டும். சில நாள்களில் குணமாகும்.
உள்ளங்கால் சில்லிட்டு விட்டதா?
சுக்கை பொடி செய்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தேய்க்க சூடேறும்.
ஊளை சதை குறைய…
இலந்தை மர இலைகளை அரைத்து நீரில் கரைத்துக் குடிக்க ஊளைச் சதை கரையும்.