குண்டூரில் கனக துர்கா கோயில் இடிக்கப்பட்டது. குண்டூரில் ‘நந்தி வெலுகு’ சாலையில் ‘கொல்லி சாரதா மார்க்கெட்’ எதிரில் இருந்த கனக துர்கம்மா கோயிலை தரைமட்டமாக்கினர் கார்ப்பரேஷன் ஊழியர்கள்.
சாலை விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்தக் கோயிலை இடித்தனர். நள்ளிரவில் ‘பொக்லைன் இயந்திரத்தின்’ உதவியோடு ஆலயத்தை தரைமட்டமாக்கினர். எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் அளிக்காமல் அதிகாரிகள் கோயிலை இடித்தது பற்றி ஆலய நிர்வாகிகள் ஆத்திரமடைந்தனர்.
பல்லாண்டுகளாக உள்ள கோயிலை இடித்து பற்றி உள்ளூர்வாசிகள் வருந்துகின்றனர். கார்ப்பரேஷன் நடவடிக்கை பற்றி ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முன்கூட்டியே தெரிவித்திருந்தால் விக்ரகங்களை பாதுகாப்பாக விதிமுறைப்படி எடுத்துச் சென்று வேறிடத்தில் நிறுவி, சாலை விரிவாக்கத்துக்கு ஒத்துழைப்பு தந்து இருப்போமே! இப்படி பூஜையில் உள்ள விக்கிரகங்களை கூட துவம்சம் செய்து இடித்து பாழாக்கி விட்டீர்களே என்று பக்தர்கள் மனம் குமுறுகின்றனர்.
கடந்த காலத்தில் சந்திரபாபு கூட புஷ்கரத்தின் போது இதுபோன்ற செயல்களை செய்தார். அவருக்கு நேர்ந்த கதிதான் ஜெகனுக்கும் நேரும் என்று சாபம் விட்டனர் . தனது செயலுக்காக ஜெகன் தகுந்த பலனை அனுபவிக்க வேண்டிவரும் என்று பக்தர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.