பெண் பல் மருத்துவர் ஒருவர் தனது சகோதரியின் திருமணத்திற்காக தன்னை அழகாக்கிக் கொள்ளும் ஆசையில் அழகு நிலையம் சென்று அழகை கெடுத்துகொண்டுள்ளார். அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
லீசா தேவி அசாம் மாநிலம் கவுகாத்தியின் கோலாகாட் பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பல் மருத்துவராக தற்போது பணியாற்றி வருகிறார். இவரது சகோதரிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. அதனால், தேவி புகழ்பெற்ற ‘Kaya’ எனும் அழகு நிலையத்திற்கு தனது முகத்தை அழகுபடுத்த சென்றுள்ளார்.
அங்கு சென்று அவர் தனது முகத்திற்கு ஃபேசியல் செய்துள்ளார். அப்போது அழகு நிலைய ஊழியர் ஸ்டீமரில் இருந்த சூடான தண்ணீரை லீசாவின் தெரியாமல் கொட்டிவிட்டார். இதனால் அவரின் முகம் முழுவதும் வெந்துவிட்டது.
இதனால் தேவி அலறித் துடித்துள்ளார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஒரு பக்கம் தனது சகோதரியின் திருமணம் நடைபெறவுள்ளது மறுபக்கம் தேவியின் முகம் வெந்து போனதால் அவரின் மொத்த குடும்பமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அனுபவமற்ற அழகு நிலைய ஊழியரால் தனக்கு இந்த நிலை ஏற்பட்ட்டுள்ளது என்று கூறிய அவர், அங்கிருந்த ஸ்டீமர் தரமானதாக இல்லை என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையம் மற்றும் நீதிமன்றத்தில் புகார் அளிக்க போவதாக அவர் கூறியுள்ளார்.
தேவியின் முகம் குணமடைய 6 மாதங்கள் வரை ஆகலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் முகத்தை மறைக்கும் மாஸ்கை அணிந்து பணிக்கு செல்வதாக கூறியுள்ளார்.
இந்த சம்பவம் அசாமில் உள்ளவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது