கலேவல – பட்டிவல பிரதேசத்தில் உள்ள 42 வயதான தந்தை ஒருவர், தாய் இல்லாத காரணத்தால் தனது 17 வயதான மகளை காப்பகம் ஒன்றில் சேர்த்துள்ளார். தாயை இழந்த குழந்தை என்பதால் மகளின் மீது அளவுக்கு அதிகமான அன்பு வைத்துள்ளார்.
இந்நிலையில், விடுமுறைக்காக அவரது மகள் வீடிற்கு வந்துள்ளார். அப்போது அந்த தந்தை தனது மகளை அவரது உறவினரான 19 வயதான பெண் ஒருவரின் வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.
அங்கு அவரது மகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், திடீரென அவரது உறவினர் சிறுமிக்கு அவரை விட மிகவும் வயது அதிகமான நபர் ஒருவரை வரன் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தந்தைக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை அவரது உறவினரான 19 வயதான பெண் வேலை செய்யும் புத்தக நிலையதிற்கு சென்று கூர்மையான கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இதனால் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் கொலை செய்த தந்தை மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.