ஜம்மு-காஷ்மீர் ரஜவுரி மாவட்டம் சுந்தர்பானி பகுதியில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கிச் சண்டை யில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
பயங்கரவாதிகள் தாக்கியதில் இந்திய ராணுவ வீரர்கள் ஸ்ரீஜித் மற்றும் குண்டூரை சேர்ந்த ஜஷ்வந்த் ரெட்டி (23) ஆகியோர் வீரமரணம் அடைந்தனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கொத்தபாளையத்தை சேர்ந்த ஜஷ்வந்த் ரெட்டி (23), கடந்த 2016-ம் ஆண்டில் மதராஸ் ரெஜிமென்டில் ராணுவத்தில் சேர்ந்தார்.
முதலில் நீலகிரியிலும், பின்னர், காஷ்மீரிலும் பணியில் அமர்த்தப்பட்டார். அடுத்த மாதம் இவருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது. இந்நிலையில் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்துள்ளார் ஜஷ்வந்த்.
இந்நிலையில், கடப்பாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற் கொண்டுள்ள ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி, வீரமரணம் அடைந்த ஜஷ்வந்தின் குடும்பத்தினருக்கு ரூ. 50 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். ‘
ஜஷ்வந்த் இளம் வயதில் நாட்டுக்காக உயிர் துறந்துள்ளார். இவரது தியாகம் வாழ்நாளில் மறக்க முடியாது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார்