ஆந்திராவில் 10 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் கைது செய்த காவல்துறை.
ஆந்திரா மாநிலம் தெனாலி பகுதியை சேர்ந்த 26 வயதான அஹரோன் பிரகாஷ் என்ற பாதிரியார் சொந்தமாக தேவாலயத்தை நடத்தி வருகிறார்.
மதம் தொடர்பான கல்வியை கற்பித்து வரும் பாதிரியாரிடம், தனியார் மருத்துவமனையில் செவிலியாராக பணிபுரியும், பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து சிறுவனின் தாய், பாதிரியாரிடம் தனது மகனுக்கு மதம் குறித்த நல்ல கருத்துகளை கற்றுக்கொடுக்கும்படி சொல்லிவிட்டு பாதிரியாரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். சிறுவன் பாதிரியாருடன் 8 மாதங்களுக்கும் மேலாக அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுவன் நோய்வாய்ப்பட்ட காரணத்தினால், தந்தை சிறுவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். சிறுவன் காயங்களுடன் இருந்தது குறித்து பெற்றோர் விசாரித்தபோது, பாதிரியார் சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.
காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து பாதிரியாரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.