பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் விலங்குகளின் வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
சிங்கம் சில மிருகங்களிடமே அச்சப்படும். அதில் யானையும் ஒன்றாகும். யானையின் விசாலமான தோற்றம் காரணமாக சில சமயங்களில் யானையைப் பார்த்து காட்டு ராஜாவான சிங்கமும் அச்சப்படுவது உண்டு.
யானை, சிங்கம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகும் போது அது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுவது வழக்கம். தற்போது மீண்டும் அப்படிப்பட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது.
வீடியோவில், காட்டில் யானைக்கூட்டத்தை பார்த்து சிங்க கூட்டம் பயந்து ஓடுவதை காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காட்டில் சிங்க கூட்டம் ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதைக் காண முடிகின்றது. ஆனால் அந்த ஓய்வை கெடுக்கும் வகையில், ஒரு குழப்பம் ஏற்படுகிறது. முதலில் சிங்கக் குட்டிகள் அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்குகின்றன. பிறகு பெரிய சிங்கங்களும் ஓடுகின்றன.
ஆனால், கூட்டத்தின் தலைவனாக உள்ள சிங்கம் மட்டும் அங்கேயே அமர்ந்திருக்கிறது. எனினும், யானைக்கூட்டம் தங்களை நோக்கி விரைவாக வருவதை பார்த்தவுடன் அதுவும் வாலை சுருட்டிக்கொண்டு ஓடத் தொடங்குகிறது.
யானைகளின் கோபத்தைப் பார்த்தால் சிங்கத்தைப் பழிவாங்கப் போவது போல தோன்றுகிறது.
காட்டில் நடந்த சம்பவம் வைரல் ஆனது
யானைகள் மற்றும் சிங்கங்கள் தொடர்பான இந்த வீடியோ animalcoterie என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது.
காடுகளில் நடக்கும் இது போன்ற காட்சிகள் பொதுவாக காணக்கிடைப்பதில்லை. இந்த வீடியோவை பார்த்து ஒருவர், ‘யாரு ராஜா?’ என எழுதியுள்ளார்.
மற்றொரு பயனர், ‘காட்டு ராஜா எங்கே’ என வேடிக்கையாக கமெண்ட் செய்துள்ளார். இந்த வீடியோ இதுவரை ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது.