சமூகத்தை அச்சுறுத்தும் ‘டேட்டிங்’ செயலிகளை தடை செய்ய வேண்டும்!

write thoughts - 2026
#image_title

இந்தியாவில் ‘டேட்டிங்’ செயலிகளை சுமார் 40 லட்சம் பேர் பயன்படுத்தி வருவதும், அவர்களில் பெரும்பாலானோர் திருமணமானவர்களாக இருப்பதும், பெண்களின் பங்களிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 148 சதவிகிதம் அதிகரித்திருப்பதும் சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

அனைத்து ‘டேட்டிங்’ பயன்பாடுகளும் தவறானவை அல்ல என்றாலும், ‘டேட்டிங்’ செயலிகளின் பயன்பாடு அதிகரித்து, திருமணத்தை மீறிய உறவுகள் உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் காட்டுவது சமூகத்தின் தற்போதைய பாதை கவலைக்கிடமாக உள்ளதை சுட்டிக்காட்டுகிறது. இளம் வயது இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே இவ்வகை செயலிகளின் பரவல், சமூக ஒழுக்கம் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையை உருவாக்குகிறது.

திருமணம், வேலைவாய்ப்பு, குடும்ப வாழ்க்கை போன்ற அடிப்படை நிலைகள் சரியாக அமையாதது போன்ற காரணங்களுடன், மது, போதைப் பொருள் பழக்கங்கள் மற்றும் தவறான நட்புகள் இணைந்து இளைஞர்களை தவறான பாதைகளுக்கு இட்டுச் செல்கின்றன. இதனால் சமூகத்தில் ஒழுங்கின்மை மட்டுமல்லாமல், குற்றச்செயல்கள் மற்றும் நெறி சிதைவும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது என்னவெனில், இந்தப் போக்கு கல்வியறிவு பெற்ற மற்றும் நடுத்தர வர்க்கத்தினரிடமும் காணப்படுகிறது.

மேலும், ‘டேட்டிங்’ செயலிகள் சைபர் குற்றங்களுக்கு வழிவகுக்கும் அபாயமும் அதிகரித்து வருகிறது. அறிமுகமற்றவர்களுடன் தொடர்பு கொண்டு, தங்களுக்கே தெரியாமல் பதிவு செய்யப்படும் தனிப்பட்ட தகவல்கள், வீடியோ, ஆடியோ போன்றவற்றை பின்னர் பயன்படுத்தி மிரட்டல் மற்றும் பண மோசடி நடத்தும் சம்பவங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இது தனிநபர் மரியாதை மட்டுமின்றி, குடும்பத்தின் சமூக மதிப்பையும் பாதிக்கக்கூடியதாகும். ‘டேட்டிங்’ செயலிகளில் ஒரு தனிப்பட்ட தொடர்பாக தொடங்கி, திட்டமிட்ட மோசடியாக மாறும் அபாயம் அதிகம். ஒரு கிளிக்கில் தொடங்கும் தொடர்பு, ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் நிலைக்கு செல்லக்கூடும்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இதே போக்கின் ஒரு பகுதியாக, ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்க்கும் காட்சிகளுடன் சிலர் தோன்றி, “சாட்டிங் செய்ய வேண்டுமா, ‘டேட்டிங்’ செய்ய வேண்டுமா?” என அழைக்கும் வகையில் சிறு வீடியோக்கள் மற்றும் விளம்பரங்கள் பரவுவது கவலைக்கிடமானதாக உள்ளது. இத்தகைய உள்ளடக்கங்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் இருப்பதால், இவ்வாறான விளம்பரங்களையும் கட்டுப்படுத்துவது அவசியமாகிறது.

பெருநகரங்களில் தொடங்கிய ‘டேட்டிங்’ கலாச்சாரம், பிற நகரங்கள் மற்றும் இளைஞர்களிடமும் பரவுவதற்கு முன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதுகுறித்து முழுமையான ஆய்வு செய்வதுடன், பயன்பாட்டை கட்டுப்படுத்தும் கொள்கைகள் அவசியம்.

இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், ஒரு குறிப்பிட்ட வயது வரையிலான கட்டுப்பாடுகள் அல்லது கடுமையான விதிமுறைகள் கொண்டு வரப்பட வேண்டும். கேமிங், சூதாட்ட செயலிகளை தடை செய்தது போல், ‘டேட்டிங்’ செயலிகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகள் அல்லது தேவையெனில் தடை செய்ய வேண்டும்.

இல்லையெனில், தனிநபர் வாழ்க்கையும் சமூக அமைப்பும் பாதிக்கப்படும் பிரச்சினையாக இது மாறும் அபாயம் மறுக்க முடியாத ஒன்று; தனிநபர் விருப்பம் என்ற பெயரில் பரவும் சீரழிவுகள், சமூக அமைப்பையே சீர்குலைக்கும் எச்சரிக்கை மணி ஆகும்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூலை 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூலை 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 20 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

Entertainment News

Popular Categories