பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த ஒரு தீவிரவாதி, ஞாயிற்றுக்கிழமை காஷ்மீர் குல்ஹாமில் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி (ஹைதர்) இரண்டு வருடமாக வடகிழக்கு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார்.
தேடுதல் வேட்டையில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்” என்று காஷ்மீர் பகுதி காவல் ஆணையர் விஜய் குமார் தெரிவித்தார்.
தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தில் இருந்து பெருமளவிலான வெடிப்பொருட்களை பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்டது.