இஸ்லாமியரின் பண்டிகையான ஈத் திருநாள் இன்று நாடெங்கும் கொண்டாடப் படுகிறது. இதை முன்னிட்டு, பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உள்ளிட்டோர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
பிரதமர் மோடி தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரம்ஜான் வாழ்த்தில், இந்த நாளில் சமூகத்தில் ஒற்றுமையின் இணைப்பு, வலிமையாக வேண்டும் என்று கூறியுள்ளார்.
Eid Mubarak! May this day deepen the bonds of unity and harmony in our society. https://t.co/lSeBAUc6JW
— Narendra Modi (@narendramodi) June 16, 2018
அதுபோல் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள ட்விட்டரில் பதிவில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துக் கொள்வதாகவும், சமூகத்தில் பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை குடும்பங்களுக்கு இந்தப் பண்டிகை கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
Id Mubarak and good wishes to all fellow citizens, especially to our Muslim brothers and sisters in India and abroad. May this happy occasion bring joy to your families and foster fraternity, understanding and mutual goodwill in our shared society #PresidentKovind
— President of India (@rashtrapatibhvn) June 16, 2018
ஈகைத் திருநாள் என அழைக்கப்படும் ஈத் பண்டிகை, இன்று கொண்டாடப் படுகிறது. பிறை தெரிந்ததாக தலைமை காஜி அறிவித்ததை ஒட்டி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவியும், இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.